Subscribe Us

header ads

பல மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்ட மாணவனின் நெஞ்சில் பாய்ந்த பலகைத் துண்டு (VIDEO)

மரத்தில் இருந்து விழுந்த மாணவனின் நெஞ்சுப் பகுதியில் பாய்ந்த பலகைத் துண்டு 6 மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது.


புளத்சிங்கள பேரகஸ்கொடல்ல பகுதியில் 16 வயதான பாடசாலை மாணவனொருவன்தனது சிறிய தந்தையுடன் வயலுக்கு சென்றுள்ளதுடன்அங்கு மாம்பழம் பறிக்கும் நோக்கில் மரத்தில் ஏறியபோது கீழே விழுந்துள்ளார்.இதன்போது நிலத்தில் நிலைகுத்தாக இருந்த பலகை துண்டு சிறுவனின்  நெஞ்சில் பாய்ந்துள்ளது.

தற்போது அறுவைச் சிகிச்சை மூலம் மாணவனின் நெஞ்சில் பாய்ந்த பலகைத் துண்டு அகற்றப்பட்டுள்ளது. மேலும் மாணவன் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவீர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments