Subscribe Us

header ads

இரா­ணு­வத்­தி­ன­ருக்கு பொது­மன்­னிப்பு கிடைக்கும்

யுத்த குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளான இரா­ணு­வத்­தினர் உள்­ளக விசா­ர­ணையில் அமைக்­கப்­ப­ட­வுள்ள உண்மை கண்­ட­றிதல் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு முன்னிலையில் உண்­மையை ஏற்­றுக்­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் குறித்து திட்­ட­மி­டப்­ப­டு­கின்­றது. அவ்­வாறு உண்மை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட பின்னர் மதத்­த­லை­வர்­களை உள்­ள­டக்­கிய கருணை சபை­யினால் குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்­க­ளுக்கு மன்­னிப்பு கிடைக்கும் சாத்­தியம் உள்­ளது என வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.

மேலும் தேசிய கலந்­து­ரை­யா­டல்கள் மற்றும் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ரு­ட­னான கலந்­து­ரை­யா­டல்கள் போன்­றவை நிறை­வ­டைந்த பின்­னரே உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையின் வடிவம் உரு­வாக்­கப்­படும் என்றும் அமைச்சர் குறிப்­பிட்­டுள்ளார்.
மேலும் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையில் வெளி­நாட்டு பிர­தி­நி­தித்­துவம் காணப்­ப­ட­வேண்­டுமா என்­பது குறித்தும் ஜன­வரி மாதம் விரை இடம்­பெ­ற­வுள்ள தேசிய கலந்­து­ரை­யா­டல்­க­ளி­லேயே தீர்­மா­னிக்­கப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.
அர­சாங்கம் கலப்­பு­பொ­றி­மு­றையை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­க­வில்லை. ஆனால் உள்­ளக விசா­ரணை பொறி­முறை குறித்த நம்­ப­கத்­தன்­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக சர்­வ­தேச பங்­க­ளிப்பு அவ­சியம் என அமைச்சர் கூறி­யுள்ளார்.
இதே­வேளை உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையின் கீழ் விசா­ரிக்­கப்­ப­ட­வுள்ள இரா­ணுவ வீரர்­க­ளுக்­காக அர­சாங்கம் வழக்­க­றி­ஞர்­களை பெற்­றுக்­கொள்­ள­வுள்­ள­துடன் அதற்­கான சட்ட உத­வி­களை செய்­ய­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இந்த உறுதி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­க­வினால் இரா­ணுவ வீரர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இலங்கை தொடர்­பான அமெ­ரிக்க பிரே­ரணை மற்றும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் அறிக்கை என்­ப­ன­வற்றின் பரிந்­து­ரைகள் மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பன தொடர்பில் இராணுவ வீரர்களுக்கு தெளிவூட்டும் பொறுப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கே வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த பொறுப்பை அவருக்கு வழங்கியுள்ளனர்.

Post a Comment

0 Comments