Subscribe Us

header ads

''அர­சியல் கைதிகள் என்று எவரும் இல்லை''

இலங்­கையில் அர­சியல் கைதிகள் என்று எவரும் இல்லை. குற்றம் செய்­த­வர்­களே சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர் என்று தெரி­வித்த நீதி அமைச்சர் விஜே­தாஸ ஐ.நா உள்­ளக விசா­ரணை தொடர்­பான பொறி­முறை இன்னும் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை அது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடை­பெற்று வரு­வ­தா­கவும் குறிப்பிட்டார். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உட்­பட தமிழ் கட்­சிகள் தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­தலை செய்ய வேண்­டு­மென்றும் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி வரு­வ­துடன் சிறை­யி­லுள்ள தமிழ் கைதிகள் உண்ணா விர­தத்தை மேற்­கொள்­ள­வுள்­ளனர். இது தொடர்­பாக நீதி­ய­மைச்சின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கேட்க்­கப்­பட்ட போதே அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக்ஷ மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக்ஷ மேலும் தெரி­விக்­கையில்,
சிறை­யி­லுள்ள தமிழ் கைதி­களை விடு­தலை செய்­வது தொடர்பில் நீதி­ய­மைச்­சிக்கு தற்­போது எந்த வகி­பா­கமும் கிடை­யாது. இந்த பொறுப்பு தற்­போது சிறைச்­சா­லைகள் மற்றும் மறுசீரமைப்பு சட்டம் ஓழுங்கு தொடர்­பான அமைச்­சி­டமே உள்­ளது.
இவர்­களை விடு­தலை செய்­வது தொடர்­பாக அர­சாங்க மட்­டத்தில் பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. அரச மட்­டத்­தி­லேயே இதற்கு தீர்வு காணப்­பட வேண்டும்.
நீதி­மன்றம் இவ்­வி­ட­யத்தில் தலை­யிட முடி­யாது.
அதே­வேளை தடுப்புக் காவ­லிலும், சிறைச்­சா­லை­க­ளிலும் அர­சியல் கைதிகள் என்று எவரும் கிடை­யாது. இதற்கு தமிழ் கைதி­களும் விதி­வி­லக்­கல்ல. எனவே தமிழ் அர­சியல் கைதிகள் இங்கு இல்லை.
கொலை, கொள்­ளைகள் உள்ளிட்ட பல்­வேறு குற்றச் செயல்­களில் ஈடு­பட்­டோரே சிறையில் கைதி­க­ளாக உள்­ளனர். எனவே இவ் விடயம் சட்ட ரீதி­யா­கவே அணு­கப்­பட வேண்டும்.
வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி. தமிழ் கைதி­களை விடு­தலை செய்­யு­மாறு ஊட­கங்­க­ளுக்கு கூறு­கின்றார். ஆனால் இதே வாசு, விமல் வீர­வங்ச, உதய கம்­பன்­பில ஆகியோர் புலி­க­ளுக்கு அர­சாங்கம் உத­வு­வ­தாக பாரா­ளு­மன்­றத்­திலும் வெளி­யிலும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து இன வாதத்­தையே பரப்­பு­கின்­றனர்.
ஐ.நா. அறிக்­கை­யிலும் இவ்­வி­டயம் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. எனவே அரச மட்­டத்தில் இது ஆரா­யப்­படும்.
ஐ.நா. அறிக்கை, ஜெனிவா பிரே­ரணை, உள்­ளக விசாரணை தொடர்பாக அரசாங்க உயர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இது வரையில் உள்ளக பொறிமுறை தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றார்.

Post a Comment

0 Comments