சிரியாவில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரும் சூழ்நிலை தோன்றியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளது.
மேற்படி தாக்குதல் நடவடிக்கைகளால் 370 பேருக்கும் அதிகமா னோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பலர் பொதுமக்கள் எனவும் அந்த சபை கூறுகிறது.கடந்த செப்டெம்பர் 30 ஆம் திகதி ரஷ்யா சிரியா மீது தாக்குதல்களை ஆரம்பித்தது முதற்கொண்டு சிரிய அரசாங்கப் படையினரால் அலெப்போ நகரில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக அங்கு பாரிய இடம்பெயர்வு ஒன்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அலெப்போ நகரின் தென்மேற்கு புறநகரப் பகுதகளிலிருந்து சுமார் 35,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு பிரிவின் பேச்சாளர் வனேஸா ஹுகுயனின் தெரிவித்தார்.
அவ்வாறு இடம்பெயர்ந்தவர்களில் மாகாணத்தின் மேற்கேயுள்ள தற்காலிக தங்குமிடங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளதாக அவர் கூறி னார்.
2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரியாவில் மோதல்கள் ஆரம்பமானது முதற்கொண்டு 250,000 பேர் உயிரிழந்துள்ளதுடன் பல மில்லியன்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரியாவில் மோதல்கள் ஆரம்பமானது முதற்கொண்டு 250,000 பேர் உயிரிழந்துள்ளதுடன் பல மில்லியன்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவானது சிரிய ஜனாதிபதி பஷார் அல்–அஸாத்தின் படையினருக்கு ஆதரவளிக்கும் வகையில் அந்நாட்டில் 500 க்கும் அதிகமான வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மேற்படி ரஷ்ய விமானங்களின் தாக்குதல்களில் 120 பொதுமக்கள் உட்பட குறைந்தது 370 பேர் பலியாகியுள்ளதாக பிரித்தானியாவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மேற்படி ரஷ்ய விமானங்களின் தாக்குதல்களில் 120 பொதுமக்கள் உட்பட குறைந்தது 370 பேர் பலியாகியுள்ளதாக பிரித்தானியாவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
ரஷ்ய தாக்குதல்களில் உயிரிழந்தவர்களது மொத்த தொகை தொடர்பில் மேற்படி நிலையத்தால் அறிக்கையிடப்படுவது இதுவே முதல் தடவையாகும்.லதாகியா மாகாணத்தில் திங்கட்கிழமை ரஷ்ய விமானங்கள் நடத்திய தாக்குதலில் 45 கிளர்ச்சியாளர்களும் பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக அந்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
0 Comments