Subscribe Us

header ads

உள்ளூராட்சி மன்ற தேர்தலை விகிதாசார முறையில் நடத்த வேண்டும்

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை தற்­போது அமு­லி­லுள்ள விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ முறை­மையின் பிர­காரம் நடத்த வேண்டும் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு தீர்­மா­னித்­துள்­ளது.
மேலும் உள்­ள­ராட்சி மன்ற தேர்­தலின் போது பெண் பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிக்க வேண்டும் என்றும் கட்சி தீர்­மா­னித்­துள்­ளது.மேற்­கு­றிப்­பிட்ட இரண்டு யோச­னை­க­ளையும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றி­யுள்­ளது.
ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நேற்று மாலை கட்சி் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் செயற்­குழு கூடி­யது. இந்த குழு கூட்­டத்தின் போதே இந்த தீர்­மானம் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.
தேசிய அர­சாங்கம் நிறு­வு­வப்­பட்­டதன் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் முத­லா­வது கட்­சியின் செயற்­குழு நேற்று கூடி­யது. இதன்­போது பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் மிகவும் நீண்ட நேரம் ஆரா­யப்­பட்­டுள்­ளது.
இந்த செயற்­குழு கூட்­டத்­திற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதி தலைவர் சஜித் பிரே­ம­தாஸ, உப தலைவர் ரவி கரு­ணா­நா­யக்க, பொதுச் செய­லாளர் கபீர் ஹாஷிம், பொரு­ளாளர் எரான் விக்­கி­ர­ம­ரத்ன, தவி­சாளர் மலிக் சம­ர­விக்­ரம, ஊடக பேச்­சாளர் அகில விராஜ் காரி­ய­வசம், சபை முதல்வர் ல­க்ஷமன் கிரி­யெல்ல, அரசின் பிர­தம கொறடா கயந்த கரு­ணா­தி­லக்க, இளைஞர் அணியின் தலைவர் ருவன் விஜ­ய­வர்­தன, சிரேஷ்ட உப தவி­சாளர் ரன்ஜித் மத்­தும பண்­டார, கட்­சியின் சிரேஷ்ட தலை­வர்­க­ளான ஜோன் அம­ர­துங்க, ஜோசப் மைக்கல் பெரேரா, காமினி ஜய­விக்­கி­ரம பெரேரா, டி.எம் சுவா­மி­நாதன், ஆர் யோக­ராஜன், கொழும்பு மேயர் ஏ.ஜே.எம் முஸம்மில் உள்­ளிட்ட செயற்­குழு உறுப்­பினர் கலந்து கொண்­டனர்.
நடந்து முடிந்த பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது ஐக்­கிய தேசியக் கட்சி வெற்றி பெற்­றது. இதன்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்கம் அமைப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தீர்­மானம் எடுத்­த­மைக்கு அமை­வாக தேசிய அர­சாங்கம் நிறு­வப்­பட்­டது.
இதற்­க­மைய தேசிய அர­சாங்கம் நிறு­வப்­பட்­ட­மையின் பி்ன்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு கூட்டம் நேற்று கூடி­யது. இதன்­போது பல்­வேறு தரப்­பி­லான விவா­தங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டது. அமைச்­சர்கள் பலர் தேசிய அர­சாங்கம் தொடர்பில் தமது விவா­தங்­களை முன்­வைத்­துள்­ளனர்.எனினும் இது தொடர்பில் பல நேரம் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை அடுத்து நடத்த திட்­ட­மிட்­டுள்ள உள்­ள­ராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் முக்­கிய தீர்­மா­னங்கள் எடுக்கும் நோக்­கு­டனே நேற்­றைய தினம் கட்­சியின் செயற்­குழு கூட்டம் கூடி­யது.
இதற்­க­மைய அடுத்து நடத்­தப்­ப­ட­வுள்ள உள்­ள­ராட்சி மன்ற தேர்­தலை தற்­போ­தைய நடை­மு­றை­யி­லுள்ள விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ முறை­மையின் பிர­காரம் நடத்த வேண்டும் எனவும் முன்­னைய ஆட்­சியில் ஆரம்­பிக்­கப்­பட்ட எல்லை நிர்­ண­யத்தில் பல்­வேறு பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­வ­தா­கவும் இதன்­கா­ர­ண­மாக கிராம மட்­டத்தில் பாரிய சர்ச்சை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் தற்­போ­தைய நடை­மு­றை­யி­லுள்ள தேர்தல் முறை­மையின் பிர­கா­ரமே நடத்த வேண்­டும எனவும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் யோசனை முன்­வைத்­துள்­ளனர்.
மேற்­படி கட்சி அங்­கத்­த­வர்­க­ளினால் முன்­வைக்­கப்­பட்ட யோச­னையை கட்­சியின் செய்­ற­குழு ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றி­யுள்­ளது. அதே­போன்று அடுத்து வரும் உள்­ள­ராட்சி மன்ற தேர்­தலின் போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் பெண்கள் பிர­தி­நி­தித்­துவம் அதி­க­ரிக்க வேண்டும் என்ற யோச­னை­யையும் கட்சி ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றி­யுள்­ளது.

ஆகவே நேற்­றைய குழு கூட்­டத்தில் மேற்­கு­றித்த இரண்டு தீர்­மா­னங்கள் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.

பிர­தமர் ரணிலின் கருத்து
செயற்­கு­ழுவின் போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தற்­போ­தைய அர­சியல் நிலை­வரம் தொடர்பில் கருத்து தெரி­வித்­துள்ளார்.
இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்படுகையில்,
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சார்ந்தோர் மைத்திரியும் ரணிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மின்சார கதிரை அமர்த்துவதற்கு முனைவதற்கு முனைவதாக பிரசாரம் செய்தனர்.
எனினும் மஹிந்த ராஜபக்ஷவை மின்சார கதிரையில் காப்பாற்றியுள்ளோம். தற்போது இனவாதிகளின் வாய்மூடப்பட்டுள்ளது. எனவே இந்த விடயத்தை கிராமத்திற்கு எடுத்து செல்லுமாறு கோரியுள்ளார்.

Post a Comment

0 Comments