Subscribe Us

header ads

தேர்தலை தொகுதிவாரி முறையில் நடத்த வேண்டும்

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை தொகு­தி­வாரி முறை­மையின் கீழ் நடத்­து­வ­தற்கு நேற்று கூடிய ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்­டத்தின் போது தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யா­ள­ரினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்கை தொடர்பில் ஆராய்­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தலை­மையில் குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு கூட்டம் நேற்று இரவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கூடி­யது.இந்த சந்­திப்­பிற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட­சியின் சிரேஷ்ட தலை­வர்கள், அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கலந்து கொண்­டுள்­ளனர்.
ஜனா­தி­பதி தலை­மையில் கூடிய குழு கூட்­டத்தின் போது அடுத்த வருடம் நடத்த திட்­ட­மிட்­டுள்ள உள்­ள­ராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஆரா­யப்­பட்­டுள்­ளது. இதன்­போது அடுத்த வருடம் நடத்த திட்­ட­மிட்­டுள்ள உள்­ள­ராட்சி மன்ற தேர்­தலை தொகு­தி­வாரி முறை­மையின் கீழ் நடத்­து­வ­தற்கு நேற்­றைய பாரா­ளு­மன்ற குழு கூட்­டத்தில் ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
அதே­போன்று விடு­தலை புலி­க­ளு­ட­னான போரின் போது இறுதி கட்­டத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வையில் அதன் ஆணை­யாளர் செய்யத் ஹூசைன் அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்தார்.
இதன்­படி பாரா­ளு­மன்ற குழு கூட்­டத்தின் போது இது தொடர்பில் பர­வ­லாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிக்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு கூட்­டத்தில் போது முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தலை­மையில் குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.
இதற்­க­மைய முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தலை­மை­யி­லான குழுவில் அமைச்­சர்­க­ளான நிமல் சிறி­பால டி சில்வா, டிலான் பெரேரா, அநுர பிரி­ய­தர்­ஷன யாப்பா, சுசில் பிரேம்­ஜ­யந்த, பைஸர் முஸ்­தபா, மஹிந்த சம­ர­சிங்க ஆகியோர் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளனர்.
இது தொடர்பில் ஆரா­யந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் அறிக்­கை­யொன்றை சமர்­பிப்­ப­தற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அதேபோன்று தேசிய அரசாங்கத்தின் நிலைவரம் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அத்தோடு பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இன்று கூடவுள்ள பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பிலும் பரவலாக ஆராயப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments