Subscribe Us

header ads

அம்பாந்தோட்டையில் போட்டியிடுவதற்கு மஹிந்த பெரும் அச்சப்படுகின்றார்


முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ எந்த மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­வது என்­பதில் குழப்­பத்தில் உள்ளார். மேலும் தனது மாவட்­ட­மான அம்­பாந்­தோட்­டையில் போட்­டி­யி­டு­வ­தற்கு அவர் பெரும் அச்­சப்­ப­டு­கின்றார் என்று ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார்.
ஜன­வரி 8 ஆம் திகதி வெற்றி கொண்ட சவால்­களை மீளவும் வெற்றிகொள்­வது எமக்கு பெரிய சவால் அல்ல. எவர் தேர்­தலில் கள­மி­றங்­கி­னாலும் நாமே பெரும்­பான்­மையை பெற்று ஆட்சியமைப்போம் என்றும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய தேசியக்கட்சி தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று இடம்­பெற்ற ஊட­கவி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் அரச ஊழி­யர்கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவும், அநீதி இழைக்­கப்­ப­டு­வ­தா­கவும் குற்றம் சுமத்­து­கின்றார். எனினும் எந்த ஆட்­சிக்­கா­லத்தின் போது அரச ஊழி­யர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டது என்­பது அனை­வரும் அறிந்த விட­ய­மாகும்.
குறு­கிய காலத்­தி­லுத்­தினுள் நாட்டு மக்­க­ளுக்கு பல்­வேறு சேவை­க­ளையும் வழங்­கி­யுள்ளோம். இந்­நி­லையில் முன்னாள் ஜனா­தி­ப­தியின் குற்­றச்­சாட்­டுகள் நியா­ய­மற்­ற­தாக மாறி­யுள்­ளது.
இந்­நி­லையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மீளவும் அர­சி­யலில் பிர­வே­சிக்க முனை­கின்றார். இவ­ரது வரு­கை­யினால் நாம் அச்சம் அடை­யப்­போ­வ­தில்லை.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ எந்த மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­வது என்­பதில் குழப்­பத்தில் உள்ளார்.மேலும் தனது மாவட்­ட­மான அம்­பாந்­தோட்­டையில் போட்­டி­யி­டு­வ­தற்கு பெரும் அச்­சப்­ப­டு­கின்றார்.

ஜன­வரி 8 ஆம் திகதி வெற்றிக் கொண்ட சவால்­களை மீளவும் வெற்றிக் கொள்­வது எமக்கு பெரிய சவால் அல்ல. எவர் தேர்­தலில் கள­மி­றங்­கி­னாலும் நாமே பெரும்­பான்­மையை பெற்று ஆட்சி அமைப்போம்.
மேலும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பு­மனு நட­வ­டிக்­கைகள் அனைத்தும் முழுமையாக பூர்த்தியாகியுள்ளன.ஊழல் மோசடிகளுடன் தொடர்புபடாதோரையோ தெரிவு செய்துள்ளோம்.எனவே அடுத்த தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சிப்பீடமேறுவோம் என்றார்.

Post a Comment

0 Comments