Subscribe Us

header ads

"மஹிந்­த­வுக்கு மக்கள் பதி­லடி வழங்­குவர்''


முன்னாள் ஜனா­தி­பதி, தேர்­தலில் போட்­டி­யிட இட­ம­ளித்­தமை ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் முடி­வாகும். இதற்கு மக்கள் உரிய பதிலை வழங்­கு­வார்கள்.
நல்­லாட்­சியை உறு­திப்­ப­டுத்தி சமா­தான சூழலை ஏற்­ப­டுத்­து­வதே எமது இலக்­கென ஜாதிக்க ஹெல­உ­ரு­ம­யவின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான பாட்­டலி சம்­பிக்­க­ர­ண­வக்க தெரி­வித்­துள்ளார்.
வட­பி­ராந்­தி­யத்­திற்­கான இலங்கை மின்­சார சபை தலைமைச் செய­லகத் திறப்பு விழாவில் கலந்து கொள்­வ­தற்­காக வருகை தந்­தி­ருந்த அமைச்­ச­ரிடம் அந்­நி­கழ்வின் பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் வினா­வுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
இந்­நாட்டின் எதிர்­காலம் சிறப்­பாக அமை­ய­வேண்டும். மக்­களின் சிந்­த­னை­களில் மாற்­றங்கள் அவ­சியம். சமா­தா­ன­மான நிலை­மைகள் தொடர்­வ­தற்­கு­ரிய சூழல்கள் தொடர்ந்தும் அமை­ய­வேண்டும். இளம் சமு­தா­யத்­தி­ன­ரிடம் இவ்­வா­றான சிந்­த­னைகள் வெ ளிப்­பட்டு அவை ஆக்­க­பூர்­வ­மாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும்.
புதிய அர­சியல் கலா­சா­ர­மொன்று உரு­வாக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். குறிப்­பாக நல்­லாட்சி, சம­உ­ரிமை, சமா­தா­னத்தை மையப்­ப­டுத்­தி­ய­தாக அது அமை­ய­வேண்டும். இதற்­கான சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக நாம் போரா­டு­வ­தற்குத் தயா­ராக இருக்­கின்றோம். இதுவே எமது நிலைப்­பா­டாகும்.
இதற்­கான அழுத்­தங்­களை நாம் வழங்­க­வுள்ளோம். இந்த இலக்கை அடை­வ­தற்­காக நாட்டின் பிர­ஜைகள் அனை­வரும் ஒன்­று­பட்டு அர்ப்­ப­ணிப்­புடன் எம்­மோடு கைகோர்க்­க­வேண்டும்.பொதுத் தேர்­தலில் முன்னாள் ஜனாதிபதி போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வாய்ப்பு வழங்கியமை அவர்களுடைய தீர்மானமாகும். அவர் போட்டியிட்டால் மக்களே அதற்குரிய பதிலடியை வழங்குவார்கள் என்றார்.

Post a Comment

0 Comments