துபாயில் மாநகராட்சி ஊழியர்களுக்கு ரமலான் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன
துபாய் : துபாயில் தன்னார்வ அமைப்பு ஒன்றின் துபாய் மாநகராட்சி ஊழியர்கள் 2000 பேருக்கு மேல் ரமலான் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த உணவுப் பொருட்களை தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் நித்யஸ்ரீ சங்கரன் உள்ளிட்ட குழுவினர் அட்டைப் பெட்டியில் பார்சல் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
உணவுப் பொருட்களை பெற்றுக் கொண்ட தொழிலாளர்கள் தங்களுக்கு இதனை வழங்க முயற்சிகள் மேற்கொண்ட அமைப்பினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் இதனை பார்சல் செய்யும் பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை மாநகராட்சி அதிகாரிகள் பாராட்டினர்.


0 Comments