இன்று 13/11/2017 கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை நூலகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட சர்வதேச வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வாசிப்பு,கட்டுரை ,பேச்சுப் போட்டிகளில் முதலாம்,இரண்டாம்,மூன்றாம் இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை கெளரவித்து ,பரிசில்களும்,சான்றிதழ்களும்,கிண்ணங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வானது அல் அக்ஸா தேசிய பாடசாலை உப அதிபரின் தலைமையில் கல்பிட்டி கோட்டக்கல்வி காரியாலய ஆசிரியர் ஆலோசகர் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற R.M.நஸார் அவர்கள்,K.M.பஸீர் அவர்கள்,S.ரவி அவர்கள்,M.ஜவ்பர் அவர்கள் போன்றோர் பிரதான அனுசரனை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-
0 Comments