தற்போது நிதி மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதைப்போன்று தனிப்பிரிவொன்று அமைக்கப்ப ட்டு வில்பத்து விடயம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் மேல்மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை நிதி மோசடி குற்றவியல் பிரிவினூடாக விசாரணை செய்யவேண்டுமெனவும் கோரியுள்ளவர் எமது நாட்டில் சுற்றாடல் தொடர்பாக தேசிய கொள்கையொன்று நிலையானதாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
வனாந்தரங்களை அழிப்பதை நிறுத்து எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநா ட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
வில்பத்து விவகாரத்தை அடிப்படையாக கொண்டு இனவாத ரீதியில் இவ்விடயத்தை பூதகரமாக்கி சுயலாபம் தேடுவதற்கு சில சக்திகள் முயற்சித்தன. அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமாயின் நாட்டுக்கு மிகவும் ஆபத்தானதாக அமைந்திருக்கும். அதனை கருத்திலெடுத்து நாம் கடந்த சனிக்கிழமையன்று அங்குள்ள நிலைமைகளை நேரில் அறிந்து கொள்வதற்காக கள விஜயமொன்றில் ஈடுபட்டோம்.
இதன்போது பல்வேறு விடயங்களை அறிந்து கொண்டோம். அதன் பின்னர் மன் னார் அரசாங்க அதிகாரிகள் இவ்விடயத்து டன் தொடர்புபட்ட அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.
அரச தரப்பு அதிகாரிகள் அனைவரும் தங்களினால் எந்தவொரு சட்டமீறல்களும் ஏற்பட வில்லையென்பதையே திரும்பத் திரும்ப கூறினர். இவர்கள் அனைவருட னும் மேற்கொள்ளப்பட்ட கருத்துப் பரிமாற்றத்தின் போது, கடந்த அரசாங்க காலத்தில் அரசியல் ரீதியாக சட்ட முரணான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. குறிப்பாக அரசியல் ரீதியான அழுத்தத்தால் அரச அதிகாரிகள் அவ்வாறான செயற்பாடடொன்றை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கலாம். எனினும் ஜனவரி மாதம் எட்டாம் திகதிக்கு பின்னர் அந்த அரச அதிகாரிகள் குறித்த விடயத்தை வெளிப்படுத்தியிருக்கவேண்டும். அவ்வாறு செய்யாது தவறிழைத்து விட்டார்கள்.
அவ்வாறிருக்கையில் அப்பகுதிக்கு விஜ யம் செய்த நாம் அங்கு பல்லாண்டு காலமாக காணப்பட்ட பாரிய மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில தீ மூட்டப் பட்டுள்ளன. இன்னும் சில பாரிய இயந்திர ங்களினால் நிலத்தில் வீழ்த்தப்பட்டுள்ளதை கண்டோம்.
இவ்வாறு வனப் பகுதி அழிக்கப்படுவதினால் எமது சந்ததிக்குத் தான் பாரிய ஆபத்து நேரிடும். இது குறித்து இவ்விடயத்துடன் தொடர்புடைய அமைச்சரைக் கேட்ட போது குறித்த பகுதியிலிருந்து கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியேறியிருந்த மக்களே மீளக் குடியேறி வருகின்றனர். இந்த வகை யில் குறித்த பகுதியே சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஆனால் வெட்டி அழிக்கப்பட்டுள்ளமரங்கள் அனைத்தும் 1000 வருடங்கள் பழைமை வாய்ந்த பெறுமதியுடையதாகவுள்ளன. அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.
மேலும் குறித்த பகுதியில் மக்கள் குடியி ருக்க முடியாத நிலைமை காணப்படுகின் றது. குறிப்பாக அங்கு பாரியளவில் யானை கள் வசித்து வருகின்றன. அவற்றினால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும். மேலும் குடி நீர், சுகாதார வசதிகள் காணப்படவில்லை.
இந்த செயற்றிட்டத்தின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி காணப்படுகின்றது. மர்று பட்ட காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. வில்பத்து என்பதை தாண்டி ஒட்டுமொத்தமாக இயற்கை வனந்தாரமொன்று சட்டத்திற்கு முரணாக அழிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மன்னார் அரசாங்க அதிபர் உட்பட அனைத்து தரப்பினரிடமும் உரிய விசாரணைகளை அரசாங்கம் மேற் கொள்ள வேண்டும். தற்போது நூற்றுக்கு நூறு வீதமில்லாது விட்டாலும் நிதி மோசடி குற்றவியல் பிரிவினூடாக விசா ரணைகள் முன்னெடுக்கப்படுவது வரவே ற்கப்படவேண்டியதொன்றாகும். அதே போன்று சுற்றாடலுக்கு பங்கம் விளை விக்கும் இச்செயற்பாடு தொடர்பில் உரிய விசாரணைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் என்பது எமது கோரிக்கையாகும்.


0 Comments