Subscribe Us

header ads

எதிர்க்கட்சித் தலைவர் யார் ஆழமாக ஆராயப்படுகின்றது


எதிர்க்­கட்சி தலைவர் யார் எனும் விவ­காரம் தற்­போது பாரா­ளு­மன்­றத்­துக்கு புதிய விட­ய­மா­க­வுள்­ளது. இது குறித்து மிகக்­க­வ­ன­மா­கவும் ஆழ­மா­கவும் ஆரா­யப்­ப­டு­கி­றது. காலம் எடுக்­கலாம் என்­பதால் பொறுத்­தி­ருந்து பார்ப்போம் என்று சபா­நா­யகர் சமல் ராஜபக்ஷ நேற்று சபையில் தெரி­வித்தார்.
இதே­வேளை, நீங்­களே தீர்­மா­னித்து ஒரு­வரை நிய­மிப்­பீர்­க­ளானால் பிரச்­சினை சுல­ப­மாக தீர்ந்து விடும் என்றும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களை பார்த்து சபா­நா­யகர் கூறினார்.
எதிர்க்­கட்சி தலைவர் யார் என்றும் அது தொடர்­பான சபா­நா­ய­கரின் நிலைப்­பாடு என்ன என்றும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களால் எழுப்பப்­பட்ட கேள்­வி­களின்போதே சபா­நா­யகர் சமல் ராஜபக் ஷ மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்றம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பிற்­பகல் 1.00 மணிக்கு சபா­நா­யகர் சமல் ராஜ­பக் ஷ தலை­மை யில் கூடி­யது.சபையின் பிர­தான நட­வ­டிக்­கைகள் வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரம் ஆகி­ய­வற்றின் நிறைவில் எதிர்க்­கட்சி தலைவர் பதவி தொடர்பில் பிரச்­சினை எழுப்­பட்­டது.
குமா­ர­வெல்­கம
இதன்­போது ஒழுங்­குப்­பி­ரச்­சினை ஒன்றை எழுப்­பிய முன்னாள் அமைச்­சரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் களுத்­துறை மாவட்ட எம்.பி யுமாண குமா­ர­வெல்­கம கூறு­கையில்,
எதிர்க்­கட்சி தலைவர் விவ­காரம் தொடர்­பிலும் எதிர்க்­கட்சி தலைவர் யார்? என்­பது குறித்தும் சபா­நா­ய­க­ரினால் இன்­றைய தினம்(நேற்று)அறி­விக்­கப்­படும் என்று கூறப்­பட்­டது. அது தொடர்­பான அறி­விப்­பினை நாம் தங்­க­ளிடம் இருந்து எதிர்­பார்க்­கின்றோம் என்று சபா­நா­ய­க­ரிடம் கோரினார்.
சபா­நா­யகர்
இதற்கு பதி­ல­ளித்த சபா­நா­யகர் சமல் ராஜபக் ஷ கூறு­கையில்,எதிர்க்­கட்சி தலைவர் விவ­காரம் இப்­பா­ரா­ளு­மன்­றத்­துக்கு புதிய விட­ய­மாகும். இது தொடர்பில் மிகவும் ஆழ­மாக ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது என்றார்.
விமல்
இத­னை­ய­டுத்து எழுந்த முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச கூறு­கையில்,
பாரா­ளு­மன்றம் விரைவில் கலைக்­கப்­ப­ட­வுள்­ளது. பிர­த­மரும் இதனை அறி­வித்­தி­ருந்தார். அப்­ப­டி­யானால் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் வரையில் எதிர்க்­கட்சி தலைவர் பதவி விவ­காரம் ஆரா­யப்­ப­டுமா என்று கேள்வி எழுப்­பினார்.
அனுர
அதன் பின்னர் எழுந்த ஜன­நா­யக தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழு தலைவர் அனுர குமார திசா­நா­யக்க கூறு­கையில், எதிர்க்­கட்சி தலைவர் பதவி விவ­காரம் தொடர்பில் இன்னும் ஆரா­யப்­பட்டு வரு­கின்­ற­தெனில் ஆராய்ந்து முடியும் காலம் வரை­யிலும் நிமல் சிறி பால டி சில்வா தான் எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருப்­பாரா என்று கேள்­வி­யெ­ழுப்­பினார்.

சபா­நா­யகர்
இதற்கு பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக் ஷ கூறுகையில்,விடயம் ஆராயப்பட்டு வருகின்றது. சற்றுப்பொறுத்திருந்து பார்க்வும் வேண்டியுள்ளது அத்துடன் நீங்களே பேசி ஒருவரை எதிர்க்கட்சி தலைவராக நியமித்து விட்டாள் பிரச்சினை தீர்ந்து விடும் என்றார்.

Post a Comment

0 Comments