Subscribe Us

header ads

விருப்பு வாக்கற்ற தேர்தல்முறை; மாற்றம் அவசரமாக வரும்


யாழ்ப்­பா­ணத்தில் மக்கள் வாழ்­வ­தற்கு வீடில்­லாமல் கஷ்­டப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு 100 கோடி ரூபா செலவில் அரச மாளிகை நிர்­மா­ணித்தார். நாம் இதனை தடை செய்து விட்டோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார்.

விருப்பு வாக்கு முறையை முற்­றாக ஒழித்து தொகு­தி­வாரி மற்றும் விகி­தா­சார முறை கலந்த தேர்தல் மாற்றம் அவ­ச­ர­மாகக் கொண்டு வரப்­ப­டு­மென்றும் பிர­தமர் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அர­சாங்­கத்தின் 100 நாள் வேலைத்­திட்டம் தொடர்­பாக தெளி­வுப்­ப­டுத்தி உரை­யாற்றும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ரம இவ்­வாறு தெரி­வித்தார்.
சபையில் பிர­தமர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன பொறுப்­பேற்­ற­வுடன் நூறு நாள் அவ­சர வேலைத்­திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. ஜன­நா­யகம் தலை­கீ­ழாக்­கப்­பட்ட சூழ்­நி­லை­யி­லேயே எமது ஆட்­சியின் வேலை­களை ஆரம்­பிக்கும் நிலை­யேற்­பட்­டது.
அனைத்தும் அர­சியல் மய­மாக்­கப்­பட்ட நிலையில் ஊழல் மோச­டிகள் நிறைந்த அரச உத்­தி­யோ­கத்­தர்கள் குழு­வு­டனும் அடி­மைப்­ப­டுத்­தப்­பட்ட சமூ­கத்­து­ட­னேயே நாம் ஆட்சி பொறுப்­பேற்றோம். இச் சவாலை ஏற்­றுக்­கொண்டோம். அதற்கு முகம் கொடுத்தோம்.
தற்­போது மைத்­தி­ரியின் ஆட்­சியின் கீழ் 88 நாட்­களில் நாம் முன்­னெ­டுத்­துள்ள வேலைத்­திட்­டங்கள் தொடர்­பாக திருப்­தி­ய­டை­கிறோம்.100 நாள் வேலைத்­திட்­டத்தில் மக்­க­ளிக்கு பல்­வே­று­பட்ட சலு­கை­களை வழங்­கி­யுள்ளோம். அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலைகள், எரி­பொ­ருட்­களின் விலைகள் மற்றும் சமையல் எரி­வா­யுவின் விலைகள் குறைக்­கப்­பட்­டன. அரச ஊழி­யர்கள், ஓய்­வூ­தி­யக்­கா­ரர்­க­ளுக்கும் சம்­பள உயர்­நிலை வழங்­கப்­பட்­டன. கர்ப்­பிணி தாய்­மா­ருக்கு ரூபா 20, 000 பெறு­ம­தி­யான போஷாக்கு உண­வுப்­பொதி வழங்­கப்­பட்­டது.
நெல்­லுக்கு உத்­த­ர­வாத விலை வழங்­கப்­பட்­ட­தோடு பாலுக்கும் உத்­த­ர­வாத விலை வழங்­கப்­பட்­டது. தரம் குறைந்த உரக்­கொள்­வ­னவு நிறுத்­தப்­பட்­டது. கைத்­தொ­லைப்­பே­சி­க­ளுக்­கான மீள் நிரப்பு கட்­ட­ணத்­துக்­கான வரி குறைக்­கப்­பட்­டது.
இரண்டு இலட்­சத்­திற்கு உள்­ளான அரச வங்­கி­களில் அடகு வைக்­கப்­பட்ட நகை­க­ளுக்­கான வரி நீக்­கப்­பட்­டது. அது மே மாதம் தொடக்கம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். மஹா­பொல வரித் தொகை அதி­க­ரிக்­கப்­பட்­டது.
ஊழி­யர்கள், விவ­சா­யிகள், மீன­வர்கள் என அனை­வ­ருக்கும் சலு­கைகள் வழங்­கப்­பட்­டது மட்­டு­மின்றி தனியார் ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்வு வழங்க வேண்டும் என பரிந்­து­ரையை மட்­டுமே முன்­வைக்­காது அதனை சம்­பள நிர்­ணய சபைக்கு மட்டும் வரை­ய­றுக்­காது தனியார் துறை ஊழி­யர்­களின் சம்­பள உயர்வு அதி­க­ரிப்­ப­தற்­காக பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றது. இவ்­வா­றான அனைத்து சலு­கை­களும் மக்கள் மீது வரிச்­ச­லு­கை­களை சுமத்­தா­மலே வழங்­கினோம்.
ஆட்சிப் பொறுப்பை தாம் கையேற்­கும்­போது சமூகம் சீர­ழிந்து காணப்­பட்­டது. எனவே பொரு­ளா­தார சமூக, அர­சியல் ரீதி­யாக பல்­வேறு மாற்­றங்­களை செய்ய வேண்­டிய நிலை­யேற்­பட்­டது.
19ஆவது திருத்தம் இவை­ய­னைத்­திலும் முதன்­மை­யா­ன­தாகும். இது தொடர்­பாக தக­வல்கள் சபையில் முன் வைக்­கப்­பட்­டுள்­ளது. எனவே அதிக தக­வல்கள் அவ­சி­ய­மில்லை.

தேர்தல் முறை மாற்றம் தொடர்­பாக நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். விருப்பு வாக்கு முறையை முற்­றாக ஒழித்து விகி­தா­சாரம் மற்றும் தொகு­தி­வாரி சார்ந்த தேர்தல் முறையை கொண்டு வரு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இது தொடர்பில் நிறை­வேற்றுச் சபையில் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. அதற்­க­மைய தெரி­வுக்­குழு நிய­மிக்­கப்­பட்டு அதற்­கான நகல் தயா­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும். அத்­தோடு தகவல் அறியும் சட்ட மூலத்­தையும் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைப்போம்.
போதை பொருட்­களை தடை செய்­வ­தற்­கான கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­கின்­றது. கடந்த ஆட்­சியில் இவ் வியா­பா­ரத்தில் ஈடு­பட்ட நெத்­த­லிகள் மட்­டுமே பிடி­பட்­டுள்­ளன. முத­லைகள் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­கின்­றன ஊழல் மோச­டி­களை ஆராய்­வ­தற்கும் பலப்­ப­டுத்­து­வ­தற்கும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளது. பாரிய ஊழல் மோச­டி­களை விசா­ரணை செய்­வ­தற்­கான தனி­யான பிரி­வொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தோடு அவர்­களின் ஊழல் மோச­டி­களை கண்­டு­பி­டிப்­ப­தற்­காக எமது அதி­கா­ரி­க­ளுக்கு அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து, உலக வங்கி மற்றும் இந்­தியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து பெற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கி­றது.
ராஜபக் ஷ ஆட்சி காலத்தில் காட்­டு­தார்பார் நாட்­டுக்குள் காணப்­பட்­டது. இன்று எமது நீதித்­துறை மற்றும் படை­களின் ஒழுக்கம் தொடர்­பாக சர்­வ­தேசம் நம்­பிக்கை வைக்க ஆரம்­பித்­துள்­ளது. சர்­வ­தேச ரீதியில் எமக்கு எதி­ராக முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்­டுக்­களை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றோம்.
*ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜீ.எஸ்.பி.வரிச்­ச­லு­கைகள் மற்றும் எமது மீன்­களை ஏற்­று­மதி செய்­வ­தற்­கான அனு­ம­தி­யையும் மீண்டும் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான அனைத்து முயற்­சி­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.
சர்­வ­தேச ரீதியில் எமது தாய் நாடு இழந்­துள்ள சலு­கைகள் அனைத்தும் மீளப்­பெற்­றுக்­கொள்­ளப்­படும். யுத்­தத்தால் பாரிய அளவில் பாதிக்­கப்­பட்ட எமது வடக்கு மக்கள் தொடர்­பாக எமது விசேட கவ­னத்தை செலுத்­தி­யுள்ளோம். அம் மக்­க­ளுக்கு மீண்டும் காணி­களை வழங்கும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அது­மட்­டு­மல்ல யாழ்­பா­ணத்தில் மக்கள் வாழ வீடு இல்­லாமல் கஷ்­டப்­ப­டு­கையில் நூறு கோடி ரூபா செலவில் முன்னாள் ஜனா­தி­பதி அங்கு அரச மாளிகை நிர்­மா­ணித்­துள்ளார். அதனை நிறுத்­தி­யுள்ளோம். ஹோட்­ட­லாக மாற்­றி­யுள்ளோம்.
நான் 3 நாட்கள் வடக்கில் விஜ­யத்­தை­மேற்­கொண்டேன். மத்­திய அர­சுக்கு சொந்­த­மான விட­யங்கள் தொடர்பில் தீர்­மா­னங்கள் எடுத்­துள்ளோம். நாட்டு மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமைச்சர்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதில்லை ஊடக சுகந்திரம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த ஆட்சியால் செய்ய முடியாதவற்றை 100 நாட்களுக்குள் நாங்கள் செய்து முடித்துள்ளோம். உறுதி வழங்கியுள்ள எஞ்சிய விடயங்களையும் செய்து முடிப்போம். ராஜபக்ஷ ஆட்சியில் 10 வருடங்களில் செய்ய முடியாததை 88 நாட்களில் செய்து காட்டியுள்ளோம். இலங்கை அரசியல் வரலாற்றில் இது முக்கியமானதாகும்.

எமது நாட்டை மீண்டும் ஒழுக்கம், பண்பு நிறைந்த நாடாக மாற்றுவதற்கான அடித்தளத்தை நாம் போட்டுள்ளோம். இதன் மூலம் நாட்டை மீளக் கட்டியெழுப்புவோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments