Subscribe Us

header ads

19 ஐ நிறைவேற்றியே தீருவோம் : அனுரகுமார திஸாநாயக்க உறுதி


பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள 19ஆவது திருத்தச் சட்­டத்­தினை தோற்­க­டிக்க பல­மான சக்­திகள் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. யார் தடுத்­தாலும் 19ஆவது திருத்­தத்தினை நிறை­வேற்­றி­யாக வேண்டும். அதற்­கான முயற்­சி­களை நாம் மேற்­கொள் வோம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

19 ஆம் திருத்­தச்­சட்ட விட­யத்தில் ஜனா­தி­பதி அமை­தி­காப்­பது சந்­தேக்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அதி­கார மோகம் மைத்­தி­ரி­யையும் மாற்­றி­விட்­டதா எனவும் அவர் கேள்வி எழுப்­பினார்.
மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­னது பாரா­ளு­மன்­றத்தில் சமர்­பிக்­கப்­பட்­டுள்ள 19வது திருத்­தச்­சட்டம் இப்­போ­தைய சூழ்­நி­லையில் மிகவும் முக்­கி­ய­மான தொரு அவ­சி­ய­மா­னதும் கூட. கடந்த ஒவ்­வொரு ஜனா­தி­பதி முறை­மையில் அனை­வரும் தாம் இம் முறை­மை­யினை நீக்­கு­வ­தாக வாக்கு கொடுத்­துள்­ளனர். ஆனால் ஒரு­வரும் அதை நிறை­வேற்­ற­வில்லை. அதே நிலை­மையில் தான் இம் முறை மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வ­தாக வாக்கு கொடுத்தே வெற்­றி­பெற்றார். ஆனால் இன்று வரை அது சரி­யாக நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. ஜனாதிபதி கதி­ரையில் அமர்ந்த அனை­வரும் செய்­ய­த­தையே இவரும் செய்­யப்­போ­கின்­றாரா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.
அதேபோல் இம்­முறை கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் அனைத்­தையும் நாம் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. ஆனால் 19ஐ நாம் முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்­கின்றோம். அத்­தோடு நிறை­வேற்று அதி­காரம் முழு­மை­யாக நீக்­கப்­பட்டு பிர­த­மரின் கைகளில் கொடுப்­ப­தாகஇ இன்று சிலர் கூறு­கின்­றனர் இது முற்­றிலும் பொய்­யான தொரு கருத்து. 19வது திருத்­தத்­தினை நிறை­வேற்­று­வதில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தி தொடர்ந்தும் அமைச்சுப் பத­வி­களை தக்­க­வைத்­துக்­கொள்­ளவே இவர்கள் முயற்­சிக்­கின்­றனர்.
எனவே 19வது திருத்தம் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான இறுதி சந்­தர்ப்பம் இதுவே, அதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வதே எமது பிர­தான நோக்கம் அதற்­கான நல்­ல­தொரு சந்­தர்ப்பம் கிடைத்­துள்ள நிலையில் அதனை தவ­ற­விட்­டு­வி­டக்­கூ­டாது. 13வது திருத்­தத்தின் முரண்­பா­டுகள் இருந்தும் மாகா­ண­சபை அதி­க­கா­ரங்கள் பலப்­ப­டுத்­தப்­பட்­டதன் கார­ணத்­தி­லையே அதை பாது­காக்க முடிந்­தது. அதேபோல் தான் 19வது திருத்தம் கொண்­டு­வந்தால் தான் ஜனா­தி­ப­திக்­கான சர்­வ­தி­கா­ரத்­தினை கட்­டு­ப­டுத்த முடியும்.
ஆனால் 19வது திருத்தம் கொண்­டு­வ­ரு­வதை தடுக்க பல சூழ்ச்சி திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. யார் என்ன சொன்­னாலும் இறுதி முடிவு ஜனா­தி­ப­தியின் கைகளில் தான் உள்­ளது. அவர் வாக்குக் கொடுத்­ததை செய்து காட்­ட­வேண்டும். எனவே இப்­போது மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கருத்து மிகவும் முக்­கி­ய­மா­னது. மக்­களின் முன்­னி­லையின் அவர் தெரி­விக்க வேண்டும். அது தவிர்ந்து கடந்த காலங்­களில் ஏனைய ஜனா­தி­ப­திகள் போல் மைத்திரிபால சிறிசேனவும் மாறிவிடக் கூடாது எவை 9ம் திகதி முதல் உரை அவருடையதாக இருக்க வேண்டும். அதில் 19வது நிறைவேற்ற தீர்மானங்கள் முன்வைக்க வேண்டும். யார் எதிர்த்தாலும் எதிர்வரும் 10ம் திகதி 19வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் எடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments