Subscribe Us

header ads

தீர்மானம் தோல்வியால் அரசுக்கு பாதிப்பில்லை : அமைச்சர் ரவி


திறை­சேரி உண்­டி­யலின் மூலம் மேல­திக நிதி கோரும் தீர்­மானம் தோல்­வி­ய­டைந்­த­மை­யினால் அர­சாங்­கத்­திற்கு எந்த பாதிப்பும் ஏற்­ப­டாது. நாம் அரச ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­யின்­படி முற்­கொ­டுப்­ப­னவு, சம்­பளம் ஆகி­ய­வற்றை பெற்­றுக்­கொ­டுப்போம். மக்கள் எதற்கும் அஞ்ச வேண்­டி­ய­தில்லை என நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.

எனினும் மேல­தி­க­மாக நாம் மக்­க­ளுக்கு வழங்­க­வி­ருந்த நிவா­ர­ணங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்­த­மைக்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு ஆத­ர­வாக செயற்­படும் விமல் வீர­வன்ஸ தலை­மை­யி­லான குழு­வி­னரே பொறுப்பு கூற வேண்டும்.
இதன் கார­ண­மாக பாரா­ளு­மன்­றத்தை ் கலைக்க வேண்­டிய எந்­த­வொரு தேவைப்­பாடும் அர­சிற்கு கிடை­யாது. ஏப்ரல் 23 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­ட­தானே போகி­றது. என அமைச்சர் சுட்­ட­காட்­டினார்.
திறை­சேரி உண்­டி­யலில் மூலம் மேல­திக நிதி கோரும் தீர்­மானம் தோல்­வி­ய­டைந்­தமை தொடர்பில் தௌிவு­ப­டுத்தும் வகையில் நேற்று இரவு நிதி அமைச்சில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த விசேட ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க இவ்­வாறு தெரி­வித்தார்.
இந்த செய்­தி­யாளர் மாநாட்­டிற்கு பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல இபொரு­ளா­தார அபி­வி­ருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர்.
இது தொடர்பில் நிதி அமைச்சர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் பெற்­றுக்­கொ­டுத்தல் இ இசமூ­ரத்தி கொடுப்­ப­னவு பெறும் அப்­பாவி மக்­க­ளுக்கு சலு­கை­களை பெற்று கொடுக்கும் நோக்­குடன் திறை­சே­ரி­யி­லி­ருந்து மேல­தி­க­மாக 400 பில்­லியன் ரூபா­வினை பெற்­றுக்­கொள்ள அர­சாங்கம் தீர்­மானம் செய்­தது. எனினும் குறித்த தீர­மானம் அவ­சி­ய­மில்லை என்று கரு­திய போதும் மக்­க­ளுக்கு மேல­தி­க­மாக நிவா­ர­ணங்­களை வழங்கும் வகையில் குறித்த தீர்­மானம் பாரா­ளு­மன்றில் சமர்­பிக்­கப்­பட்­டது.
எனினும் குறித்த தீர்­மா­னத்­திற்கு முழு­மை­யான ஆத­ர­வினை வழங்­குவோம் என்று எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பால டி சில்வா குறிப்­பிட்­டி­ருந்தார். ஆனாலும் அதற்கு எதிர்­மா­றாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஆத­ர­வாக செயற்­படும் விமல் வீர­வன்ஸ தலை­மை­யி­லான குழு­வினர் குறித்த நதி கோரல் தீர்­மா­னத்தை வாக்­கெ­டுப்­பிற்கு விடு­மாறு கோரி­யி­ருந்­தனர்.
இந்த தீர்­மானம் தொடர்­பி­லான வாக்­கெ­டுப்பின் போது எதிர்க்­கட்­சிக்குள் பிளவு ஏற்­பட்­டுள்­ளது என்­பது தெட்­டத்­தௌி­வா­கி­யுள்­ளது. சுமார் 10 வரு­ட­மாக நாட்டை சீர­ழத்­த­வர்கள் தற்­போது மேல­தி­க­மாக மக்­க­ளுக்கு வழங்­க­வி­ருந்த சலு­கைகள் இடை­நி­றுத்­தி­யுள்­ளனர். எனவே இதற்கு விமல் வீர­வன்ஸ தலை­மை­யி­லான குழு­வி­னரே பொறுப்பு கூற வேண்டும்.
ஆகவே சமூர்த்தி கொடுப்­ப­னவு பெறு­ப­வர்கள்இ விவ­சா­யிகள் மற்றும் அரச ஊழி­யர்­க­ளுக்கு கிடைக்­க­வி­ருந்த மேல­திக சலு­கை­களை இடை­நி­றுத்­தி­யுள்­ளனர். எனவே எதிர்க்­கட்­சியின் குறித்த செயற்­பாட்­டிற்கு மக்கள் உரிய பதிலை வழங்க வேண்டும்.
முன்­னைய ஆட்­சியின் போது மக்கள் மீது சுமத்­தப்­பட்ட கடன் சுமையை குறைக்கும் நோக்­கு­டனே நாம் இந்த முயற்­சியை நாம் முன்­னெ­டுத்தோம். எனினும் அதனை எதிர்க்­கட்­சி­யினர் அர்த்­த­மற்­ற­தாக்­கி­விட்­டனர்.
குறித்த தீர்­மானம் தோல்வி அடைந்­த­மை­யினால் நாம் அச்சம் கொள்­ள­வில்லை. எம்மை பய­மு­றுத்­தவும் முடி­யாது. இதன் கார­ண­மாக பாரா­ளு­மன்­றத்தை கலைக்க வேண்­டிய தேவையும் கிடை­யாது. எவ்­வா­றா­யினும் ஜனா­தி­பதி முறை­மையின் அதி­கா­ரங்­களை நீக்கி, தேர்தல் முறை­மையில் மாற்றம் செய்­யப்­பட்­டதன் பின்பு ஏப்ரல் 23 ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­ட­தானே போகி­றது.
நாட்டை சீர­ழித்­தது போதா­தென்று மறு­ப­டியும் இதற்­கான முயற்­சியை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இதனால் சீனா­வி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்ட கடனை செலுத்த எம்மால் முடி­யாமல் போகும். ஆயினும் குறித்த தீர்­மா­னத்தை மீளவும் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்து நிறை­வேற்­றுவோம்.
எனினும் 2015 ஆம் ஆண்­டிற்­கான இடைக்­கால வர­வு­செ­லவு திட்­டத்­தி­னூ­டாக திட்­ட­மிட்­டதன் பிர­காரம் அனைத்து சலு­கை­க­ளையும் வழங்­கியே தீருவோம். எவரும் இது தொடர்பில் அஞ்ச வேண்­டி­ய­தில்லை என்றார்.
திறைசேறியிலிருந்து மேலதிகமாக நிதி பெறும் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் செயற்பட்ட விதம் பின்புற்த்தால் கத்தியால் குத்தும் செயற்படாகும் .எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா இ தினேஷ் குணவர்தன ஆகியோர் குறித்த தீர்மானத்திற்கு முழுமையாக ஆதரவு வழங்குவதாக கூறிவிட்டு இவ்வராறன கீழ் தரமான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
எனினும் 175 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எமக்கு உள்ளது என்றார்.

Post a Comment

0 Comments