Subscribe Us

header ads

மைத்ரிதான் எமது தலைவர். ஆனால் தேசிய அரசாங்கப் பேச்சுக்கு இடமில்லை.


எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக்கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் போட்டி­யிட்டு கூடிய ஆச­னங்களை பெற்று எமது அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான வியூ­கங்­களை அமைத்­து­வ­ரு­கின்றோம் என்று சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும் ஐ.ம.சு.மு. வின் செய­லா­ள­ரு­மான சுசில் பிரேம்­ஜ­யந்த தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் தேசிய அர­சாங்கம் குறித்து ஐ.தே.க. வே பேசி­வ­ரு­கின்­றது. நாங்கள் தேசிய அர­சாங்­கத்­துக்கு தயார் இல்லை. தற்­போ­தைய நிலையில் தேசிய அர­சாங்கப் பேச்­சுக்கு இட­மில்லை எமது கூட்­ட­ணியின் பெரும்­பான்மை எம்.பி. க்களைக் கொண்ட ஆச­னங்­களை நாங்கள் பெற்று ஆட்­சி­ய­மைப்போம். சுதந்­திரக் கட்­சியின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எமது தேர்தல் பிர­சார மேடையில் ஏறுவார் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆகி­யோ­ரையும் இணைத்­துக்­கொண்டு எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் வெற்­றி­பெ­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்போம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள சுசில் பிரேம்­ஜ­யந்த நேற்று பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்பு ஒன்றை நடத்தி இந்த விட­யங்­களை குறிப்­பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,
புதுப்­பொ­லி­வுடன்
சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி தற்­போது புதுப் பொலி­வுடன் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. கட்­சியின் யாப்பில் பல திருத்­தங்கள் செய்­யப்­ப­ட­வுள்­ளன. அத்­துடன் கட்­சியின் அதி­கா­ரிகள் மட்­டத்­திலும் பத­விகள் ரீதி­யிலும் பல மாற்­றங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. அனைத்து மாற்­றங்­க­ளுக்கும் கட்­சியி்ன் மத்­திய குழுவும் அகில இலங்கை மத­திய குழுவும் நிறை­வேற்று சபையும் இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்­ளன.
30 வரு­டங்கள் கட்­சிக்­காக
நான் சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பா­ள­ராக வந்­துள்ளேன். நான் 1985 ஆம் ஆண்டு முதல் இந்தக் கட்­சிக்­காக செயற்­பட்­டு­வ­ரு­கின்றேன். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியை வெற்­றிலை சின்­னத்தில் நானே பதிவு செய்தேன். இந்­நி­லையில் அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முகம் கொடுக்க நாங்கள் தயா­ரா­கி­விட்டோம்.
தேர்தல் விஞ்­ஞா­பனம்
சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியை தலை­மை­ய­க­மா­கக்­கொண்டு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும். முன்­ன­ணியின் ஏனைய கட்­சிகள் இன்னும் வில­கு­வ­தாக அறி­விக்­க­வில்லை. இந்­நி­லையில் தேர்­தலில் பெறும்­பான்மை பலத்தை பெற்று ஆட்­சி­ய­மைப்­பதே எமது நோக்­க­மாகும். எமது அர­சாங்கம் ஒன்றை நாங்கள் அமைப்போம். எனவே தற்­போது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை தயா­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்றோம்.
100 நாள் திட்­டத்­துக்கு ஆத­ரவு
அச­ராங்­கத்தின் 100 நாள் திட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளிப்போம். அதில் சில திருத்­தங்­களை செய்து ஆத­ர­வ­ளிப்போம். அதில் சில திருத்­தங்­களை செய்­ய­வேண்­டி­யுள்­ளது. அவற்றை நாங்கள் முன்­வைப்போம். இது தொடர்பில் ஆராய குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.
ஒழுக்­கக்­கோவை
இதே­வேளை சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்­காக ஒழுக்­கக்­கோவை ஒன்றை தயா­ரிக்க நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்றோம். அதனை விரைவில் தயா­ரித்­து­வி­டுவோம். அதன் பின்னர் அந்த ஒழுக்­கக்­கோ­வையை மீறு­கின்­ற­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
எதிர்­வரும் இரண்டு வாரங்­களில் கட்­சியை பலப்­ப­டுத்தும் செயற்­பா­டு­களை நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­டுப்போம். 160 தேர்தல் தொகு­தி­க­ளிலும் மறு­சீ­ர­மைப்பை முன்­னெ­டுப்போம். எதிர்­வரும் மே தினத்தை சிறப்­பாக கொண்­டா­டு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
கேள்வி: தேர்­தலில் கூட்­ட­ணி­யாக கள­மி­றங்­கு­வது உறு­தி­யா­கி­விட்­டதா?
பதில்: ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யாக போட்­டி­யி­டுவோம். இது தொடர்பில் கூட்­டணிக் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­வ­ரு­கின்றோம். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெ­றுவோம். ஐ.ம. சு.மு. வில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியே பிர­தான கட்­சி­யாகும். எனவே நாங்கள் தீர்­மா­னங்­களை எடுத்து கள­மி­றங்­குவோம்.
கேள்வி: எவ்­வாறு வெற்­றி­பெ­று­வீர்கள்?
பதில்: கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் 22 தேர்தல் மாவட்­டங்­களில் நாங்கள் 9 மாவட்ட்­களில் வெற்­றி­பெற்றோம். மைத்­தி­ரி­பால சிறி­சேன 13 மாவட்­டங்­களில் வெற்­றி­பெற்­றனர். மூன்று மாவட்­டங்­களில் சிறிய வித்­தி­யா­சத்தில் தோல்­வி­ய­டைந்தோம். இந்­நி­லையில் சிறிய வித்­தி­யா­சத்தில் தோல்­வி­ய­டைந்த மாவட்­டங்­களை வெற்­றி­கொள்வோம். யாழ்ப்­பாணம் மற்றும் வன்னி மாவட்­டங்­களை கூட்­ட­மைப்பு வெற­றி­கொள்ளும். எனவே ஐக்­கிய தேசிய கட்­சி­யினால் 7 மாவட்­டங்­க­ளையே வெற்­றி­கொள்ள முடியும். அந்­த­வ­கையில் எங்­களின் வெற்­றி­பெ­று­வது நாங்­களே என்­பது உறு­தி­யாகும்.
மைத்­திரி எமது மேடையில்
கேள்வி: ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எந்த பிர­சார மேடையில் ஏறுவார்?
பதில்: சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் என்ற வகையில் எமது கட்­சியின் மேடையில் ஏறுவார்.
கேள்வி: பிர­தமர் வேட்­பாளர் யார் ?
பதில்: அது தேர்தல் நெருங்­கும்­போது அறி­விக்­கப்­படும்.
கேள்வி: மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிர­தமர் வேட்­பா­ள­ராக போடு­மாறு கூறப்­ப­டு­கின்­றதே?
பதில்: அதற்கு முன்னர் மஹிந்த ராஜ­பக்ஷ தான் தேர்­தலில் போட்­டி­யி­டு­வதா? இல்­லையா என்­ப­தனை தீர்­மா­னிக்­க­வேண்டும். ஆனால் தான் சுதந்­திரக் கட்­சிக்கு பாதிப்பு ஏற்­படும் செயற்­பா­டு­களில் ஈடு­ப­ட­மாட்டேன் என்று குறிப்­பிட்­டுள்ளார்.
கேள்வி: தேசிய அர­சாங்கம் குறித்து பேசப்­ப­டு­கின்­றதே?
பதில்: நாம் அவ்­வாறு கூற­வில்லை. தேசிய அர­சாங்கம் குறித்து ஐ.தே.க. வே பேசி­வ­ரு­கின்­றது. நாங்கள் தேசிய அர­சாங்­கத்­துக்கு தயார் இல்லை. எமது கூட்­ட­ணியின் பெரும்­பான்மை எம்.பி. க்களைக் கொண்ட ஆச­னங்­களை நாங்கள் பெற்று ஆட்­சி­ய­மைப்போம்.
கேள்வி: 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் நகல் கிடைத்­ததா?
பதில்: கிடைத்­துள்­ளது. அதில் சில திருத்­தங்­களை செய்­ய­வேண்­டி­யுள்­ளது. அதனை சமர்ப்­பிப்போம்.
கேள்வி: தற்­போது எம்.பி். யாக இருக்கும் அனை­வ­ரு­ககும் வேட்பு மனு கிடைக்­குமா?
பதில்: அதனை வேட்பு மனு சபை தீர்­மா­னிக்கும். ஆனால் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்ள அனை­வரும் குற்­ற­வா­ளிகள் ஆக­மாட்­டார்கள். எவ்­வா­றெ­னினும் வேட்பு மனு சபை தீர்­மானம் எடுக்கும்.
கேள்வி: மஹிந்த ராஜ­ப­க்ஷவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­லவும் ஒரு மேடையில் ஏறு­வார்­களா?
பதில்: தேர்­தலில் பார்க்­கலாம். கட்­சிக்கு எதிராக செயற்படமாட்டேன் என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். தற்போது நாட்டில் நிர்மாண பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தொழில்வாய்புக்கள் இழக்கப்பட்டுள்ளன. பாரிய பாதிப்புக்கள் ஏற்படலாம்.
கேள்வி: தேர்தலில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷ முன்வந்தால் வேட்பு மனு வழங்கப்படுமா?
பதில்: வேட்பு மனு கோரினால் சுதந்திரக் கட்சியின் வேட்பு மனு சபை அது தொடர்பில் தீர்மானிக்கும்.
கேள்வி: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தேசிய அரசாங்கம் குறித்து பேசியுள்ளாரே?
பதில்: அது அவர் சுதந்திரக் கட்சியின் தலைவராகுமுன்னர் கூறிய விடயங்கள். தற்போது அவர் சுதந்திரக் கட்சியின் தலைவர். எனவே தேசிய அரசாங்கப் பேச்சுக்கு இடமில்லை.
நன்றி : கேசரி

Post a Comment

0 Comments