Subscribe Us

header ads

அலரி மாளிகையின் தேர்தல் பிரச்சாரப் பொறிமுறைமையில் வீழ்ச்சி!– மைத்திரிபால

அலரி மாளிகையின் தேர்தல் பிரச்சாரப் பொறிமுறைமையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
அலரி மாளிகையில் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்குப் பொறுப்பாக செயற்பட்டு வரும் அதிகாரிகள் ஒவ்வொருவராக விலகிச் செல்கின்றனர்.
அரசாங்கத்திலிருந்து நான் விலகியதனைத் தொடர்ந்து பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
ஆளும் கட்சி என்னுடைய இழப்பினை தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த காலங்களைப் போன்று வலுவான ஓர் தேர்தல் பிரச்சாரப் பொறிமுறைமயை காண முடியவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments