ஜனாதிபதி தேர்தலில் மகிந்த போட்டியிடும் இந்த
சந்தர்ப்பத்தில் தேர்தல் குழுவின் முக்கியஸ்தரான அமைச்சர் பந்தல குணவர்த்தன
திடீரென வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்ள தயாராகி வருவதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அரசின் முக்கிய அமைச்சர்கள் சிலர்
வேதனையுடன் இருப்பதாகவும், இவரின் விஜயத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும்
கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவரின் வெளிநாட்ட விஜயத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இதேவேளை, மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்காக பெற்றோர்களையும், மாணவர்களையும் வெளி இடங்களுக்கு அழைத்து பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரின் வெளிநாட்ட விஜயத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இதேவேளை, மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்காக பெற்றோர்களையும், மாணவர்களையும் வெளி இடங்களுக்கு அழைத்து பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments