Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று டிசம்பர் - 02

1409 : உலகின் மிகப் பழைய பல்­க­லைக்­க­ழ­கங்­களில் ஒன்­றான ஜேர்­ம­னியின் லீப்ஸிக் பல்­க­லைக்­க­ழகம் திறக்­கப்­பட்­டது. 

1755 : ஐக்­கிய இராச்­சி­யத்தின் இரண்­டா­வது எடிஸ்டோன் கலங்­கரை விளக்கம் தீ விபத்தில் அழிந்­தது. 

1804 : பிரான்ஸின் பேர­ர­ச­னாக நெப்­போ­லியன்    போனபார்ட் பாரிஸில் முடி­சூ­டினார். 

1805 : நெப்­போ­லி­யனின் தலை­மையில் பிரெஞ்சுப் படைகள் ஓஸ்­டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்­பெற்ற சமரில் ரஷ்­ய-­ஆஸ்­தி­ரியக் கூட்டுப் படை­களைத் தோற்­க­டித்­தனர். 

1843 : யாழ்ப்­பா­ணத்தில் கடும் சூறா­வளி வீசி­யதில் பலத்த அழி­வுகள் ஏற்­பட்­டன. 

1848 : முதலாம் பிரான்ஸ் ஜோசப்  ஆஸ்­தி­ரி­யாவின் பேர­ர­ச­னானார். 

1852 : மூன்றாம் நெப்­போ­லியன் பிரான்ஸின் பேர­ரசன் ஆனார். 

1908 : பியூ தனது இரண்­டா­வது வயதில் சீனாவின் பேர­ர­ச­னாக முடி­சூ­டினான். 

1942 : மன்­காட்டன் திட்டம்: என்­றிக்கோ பெர்மி தலை­மை­யி­லான குழு செயற்­கை­யாகத் தானே தொட­ரு­மாறு நிகழும் அணுக்­கரு தொடர்­வி­னையை ஆரம்­பித்­தது. 

1946 : பிரித்­தா­னிய அர­சாங்கம் நேரு, பால்தேவ் சிங், ஜின்னா, மற்றும் லியாகத் அலி கான் ஆகிய தலை­வர்­களை இந்­தி­யாவின் சட்ட சபையைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த அழைத்­தது. 

1947 : பலஸ்­தீன நாட்டைப் பிரிக்க ஐ.நா. சபை எடுத்த முடிவையடுத்து ஜெரு­ஸ­லேமில் வன்­முறை வெடித்­தது. 

1954 : சீனா­வுக்கும் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் பாது­காப்பு ஒப்­பந்தம்
வொஷிங்டன் டிசியில் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. 

1956 : பிடல் கஸ்ட்ரோ, சே குவேரா மற்றும் ஆத­ர­வா­ளர்­களும் கியூபா புரட்­சியை முன்­னெ­டுப்­ப­தற்­காக கிரான்மா என்ற படகில் கியூ­பாவை சென்­ற­டைந்­தனர். 

1961 : பிடெல் கஸ்ட்ரோ தன்னை ஒரு மார்க்­சி­ச-­லெ­னி­னி­ச­வாதி எனவும் கியூபா கம்­யூ­னிஸ நாடாக இருக்கும் எனவும் அறி­வித்தார்.

1971 : அபு­தாபி, புஜெய்ரா, ஷார்ஜா, டுபாய் மற்றும் உம் அல் குவைன் ஆகி­யன
இணைக்­கப்­பட்டு ஐக்­கிய அரபு இராஜ்­ஜியம் (யூ.ஏ.ஈ.) என்ற ஒரே நாடாக்கப்­பட்­டன. 

1975 : பத்தே லாவோ என்­பவர் லாவோசின் ஆட்­சியைப் பிடித்து லாவோ மக்கள் ஜன­நா­யகக் குடி­ய­ரசை அமைத்தார். 

1976 : பிடெல் காஸ்ட்ரோ கியூ­பாவின் அரசுத் தலை­வ­ரானார். 

1980 : எல் சல்­வ­டோரில் நான்கு ஐக்­கிய அமெ­ரிக்க கன்­னி­யாஸ்­தி­ரிகள் சுட்டுக் கொலை செய்­யப்­பட்­டனர். 

1982 : அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பார்னி கிளார்க் என்­பவர் நிரந்­தர செயற்கை இதயம் பொருத்­தப்­பட்ட முதல் மனி­த­ரானார். 

1988 : பெனாஸிர் பூட்டோ பாகிஸ்­தானின் முதல் பெண் பிர­த­ம­ரானார். 

1990 : ஒன்­று­பட்ட ஜேர்­ம­னியில் 1932 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் இடம்­பெற்ற முத­லா­வது பொதுத்­தேர்­தலில்  ஹெல்முட் கோல் தலை­மை­யி­லான கூட்­டணி வெற்றி பெற்­றது. 

1993 : ஹபிள் விண்­வெளித் தொலை­நோக்­கியைத் திருத்தும் நோக்­கோடு நாசாவின் எண்­டெவர் விண்­ணோடம் விண்­ணுக்கு ஏவப்­பட்­டது. 

1993 : கொலம்­பி­யாவின் பிர­பல போதைப்­பொருள் புள்­ளி­யான பாப்லோ எஸ்­கோபர் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். 

1999 : வட அயர்­லாந்­துக்­கான அர­சியல் அதி­கா­ரங்­களை வட அயர்லாந்து
நிறைவேற்றுக்குழுவுக்கு பிரிட்டன் வழங்கியது. 

2006 : இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பகல்பூரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் அதன் வழியாகச் சென்ற கடுகதி ரயில் விபத்துக்குள்ளாகியதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice 

Post a Comment

0 Comments