Subscribe Us

header ads

சாஹிர தேசிய கல்லூரியில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த முறையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்க்கும் நிகழ்வு நாளை.

-Mohamed Muhsi-
பரிசுகளும், பதக்கங்களும் தயாராகி விட்டன!
G.C.E.O/L 2013 Exam இல் 9A பெற்ற மூவர் உட்பட சிறப்பாக சித்தி பெற்ற சாஹிர தேசிய கல்லூரி மாணவர்கள் 52 பேர் அதிபர் எஸ்.ஏ.சி.யாகூப் தலைமையில் 18.9.2014 வியாழக்கிழமை பரிசுகள்,சான்றிதழ்கள் வழங்கி பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட உள்ளனர்.

கௌரவ நகர பிதா.கே.ஏ.பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.
இவ்வைபவத்துக்கு பணம்,பொருள்,சரீர உதவி செய்தவர்களும், பதக்கங்கள் செய்து தந்த( Zahirians12 Batch)அணியினரும் நன்றியுடன் நினைவுக் கூறத்தக்கவர்கள். பகுதித் தலைவர் எம்.எப்.எம்.ஹுமாயூன் தலைமையிலான ஆசிரியர்களின் பகீரதப் பிரயத்தனம் இவ்வைபவம் சிறப்பற நடை பெற பெரிதும் உதவ உள்ளது.

இன்ஷா அல்லாஹ்.
மேலும் கணித்ததில் A பெற்ற மாணவர்களுக்கு "நீலமேகம் பவுண்டேஷன்" நினைவுச் சின்னங்கள் வழங்கவும்,அதிதிகளில் ஒருவராக கலந்து கொள்ளும்,அடுத்த மாதம் ஓய்வு பெரும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆர்.எஸ்.ஈ.புஷ்பராஜன்(கணித பாட பிரதான வளவாளர்) பாராட்டப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரிசுகளும், பதக்கங்களும் தயாராகி விட்டன.


 -AsM-

Post a Comment

0 Comments