Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று - பெப்ரவரி 05

62 : இத்தாலியின் பொம்பெய் நகரில் பாரிய பூகம்பம்  இடம்பெற்றது.

1597 : ஜப்பானின் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலர் ஜப்பானின் புதிய அரசால் ஜப்பானிய சமுகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்ச்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1649 : ஸ்கொட்லாந்து இரண்டாம் சார்ளஸை அந்நாட்டின் மன்னராகாக நாட்டில் இல்லாத நிலையில்  அங்கீகரித்தது.

1778 : தென் கரோலினா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட முதலாவது மாநிலமானது.

1782 : பிரித்தானியப் படைகளை ஸ்பானியர்  தோற்கடித்து மினோர்க்கா தீவைக் கைப்பற்றினர்.

1782 : ஒஹையோவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்கப் பழங்குடிகள் வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1852 : ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.

1885 : பெல்ஜிய மன்னனர் இரண்டாம் லியோபோல்ட் கொங்கோவைத் தனது தனிப்பட்ட பிரதேசமாக்கினார்.

1900 : பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1917 : மெக்சிஸோவின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு எற்றுக்கொள்ளப்பட்டது.

1922 : றீடர்ஸ் டைஜஸ்ட் சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1945: அமெரிக்க இராணுவ அதிகாரி ஜெனரல் டக்ளஸ் மெக்ஆர்தர் தான் உறுதியளித்தபடி மீண்டும் பிலிப்பைன்ஸின் மணிலாவுக்குத் திரும்பினார்.

1958: எகிப்து, சிரியாவை இணைத்து ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய அரபு குடியரசின் முதல் ஜனாதிபதியாக எகிப்தின் கமல் அப்துல் நாசர் தெரிவுசெய்யப்பட்டார்.

1958 : ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் சவான்னா கரையோரத்தில் 3400 கிலோகிராம் எடையுள்ள ஐதரசன் குண்டொன்றை சுமந்துசென்ற விமானமொன்று பயிற்சில் ஈடுபட்டிருந்தபோது மற்றொரு விமானப்படை விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன் போது காணாமல் போன  ஐதரசன் குண்டு இதுவரையில் இது கண்டுபிடிக்கப்படவில்லை.

1960 : ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மொஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1962: அல்ஜீரியாவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டுமென பிரெஞ்சு ஜனாதிபதி சார்ள்ஸ் டி கோல் கோரினார்.

1971 : அப்பல்லோ 14 விண்கலம்  அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது

1988: பனாமா சர்வாதிகாரி மனுவெல் நொரீகா மீது போதைப்பொருள் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டு சுமத்பத்பட்டுது.

1994: பொஸ்னியாவில் சந்தையொன்றில் எறிகணையொன்று வீழ்ந்ததால் 60 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 200 பேர் காயமடைந்தனர்.

2000: செச்னியாவில் ரஷ்ய படையினரால் சுமார் 60 பேர் கொல்லப்பட்டனர்.

2008: அமெரிக்காவின் தென் மாநிலங்களில் சுழற்காற்றினால் 57 பேர் உயிரிழந்தனர்.

Post a Comment

0 Comments