Subscribe Us

header ads

நாட்டின் உத்தியோகப்பற்றற்ற பொலிஸாக செயற்பட சிஹல ராவய தீர்மானம்

நாட்டின் உத்­தி­யோ­கப்­பற்­றற்ற பொலி­ஸா­கவும் ஊழல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரும் அதி­கா­ரி­க­ளுக்­கெ­தி­ராக தொடர் போராட்­டங்­களை நடத்தும் அமைப்­பா­கவும் விளங்­கு­வ­தற்கு தாம் தீர்­மா­னித்­துள்­ள­தாக சிஹல ராவய அமைப்பு தெரி­வித்­துள்­ளது.
 
இது தொடர்பாக மேற்­படி அமைப்பின் தேசிய அமைப்­பாளர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­விக்­கையில், அரசில் அங்கம் வகித்­து­வரும் அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டையே தற்­போது மலிந்து காணப்­பட்டு வரும் ஊழல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் முக­மாக தாங்கள் கண்டி தலதா மாளி­கையில் இருந்து கொழும்பை நோக்கி பேரணி யொன்றை நடத்­த­வுள்­ள­தா­கவும் அரச நிறு­வ­னங்­களின் செயற்­பா­டுகள் குறித்து ஆராயும் பாரா­ளு­மன்ற குழு (கோப்) வின் அறிக்­கையின் பிர­காரம் 60சத­வீ­த­மான அரச நிறு­வ­னங்கள் நட்­டத்தில் இயங்கி வரு­வ­தா­கவும் அத்­த­கைய நிறு­வ­னங்­க­ளுக்குள் நிலவி வரும் ஊழல் அதி­க­ரிப்­பையே இது எடுத்­துக்­காட்­டு­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.
 
நாட்டில் அதி­க­ரித்து வரும் ஊழல் நட­வ­டிக்­கைகள் பற்றி வாய் திறப்­ப­தற்கு இன்று அமைப்­புக்கள் எது­வு­மே­யில்லை என்­ப­த­னா­லேயே சிஹல ராவய குறித்த விட­யங்­களை தனது கையில் எடுத்­துக்­கொள்ள தயா­ரா­கவே உள்­ள­தெனக் குறிப்­பிட்­டுள்ள தேரர் மாடு­களை இறைச்­சிக்­காகக் கொல்­லுதல் மத­மாற்றம் செய்தல், தொல்­பொருள் பிர­தே­சங்கள் அழிக்­கப்­ப­டுதல், அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் காரி­யா­ல­யத்தில் தங்­கி­யி­ருக்கும் வேளையில் மறை­மு­க­மாகப் பணம் சம்­பா­தித்தல் ஆகி­ய­வற்­றுக்கு எதிர்ப்புத் தெரி­விப்­ப­தற்கும் முஸ்லிம் பெண்கள் பர்தா அணி­வ­தற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு அறை­கூவல் விடுப்­ப­தற்­குமே மேற்­படி பேரணி ஏற்­பாடு செய்­யப்­பட்டு வரு­கின்­ற­தெ­னவும் கூறினார்.
 
மாகாண சபைத் தேர்­தல்­களில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் தமது பத­விக்­கா­லத்தில் சம்­பா­திக்கப் போவதை விட கூடு­த­லான பணத்தை தேர்­தல்­களின் போது செல­விட்டு வரு­வ­தனால் அவர்கள் பத­விக்கு நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே அவர்­களின் சொத்து விவ­ரங்­களைக் கணிப்­பிடும் வழி­வ­கை­யொன்றை அறி­மு­கப்­ப­டுத்­துதல் அவ­சி­ய­மாகும் எனவும் வலி­யு­றுத்­திய அவர், அர­சி­ய­லுக்குள் நுழைய தாங்கள் விரும்­ப­வில்­லை­யெ­னவும் சிங்­கள மக்கள் சார்பில் அர­சி­யல்­வா­தி­க­ளெ­வரும் வாய்­தி­றக்­காமல் இருப்­ப­தனால் இத்­த­கைய இழி­வான விட­யங்கள் குறித்து பேசு­வ­தற்­கான பலம்­வாய்ந்த அமைப்­பொன்றைக் கட்­டி­யெ­ழுப்ப தாங்கள் எதிர்­பார்ப்­ப­தா­கவும் மாடு­களை இறைச்­சிக்­காக கொல்லப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பத்து இலட்சம் மக்களால் கையெழுத்திடப்பட்ட மனுவொன்றைத் தாங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் கையளித்திருந்த போதிலும் சாதகமான பதிலெதுவும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவேயில்லையெனவும் அவர் மேலும் விபரித்தார்.

Post a Comment

0 Comments