முஸ்லிம் பெண் பேசுகிறாள் என்பதற்காக அவர் கூறும் தவறான கருத்தை ஏற்கவும் மாட்டோம்,முஸ்லிம் அல்லாத பெண் பேசுகிறாள் என்பதற்காக அவர் கூறும் சரியான கருத்து மறுக்கவும் மாட்டோம் என்பதுதான் ஒவ்வொரு முஸ்லிம்களின் எண்ண ஓட்டம் ஆகும்.
அந்த வகையில் நீயா நானா நிகழ்ச்சியில் பெற்றோர்களை அநாதை இல்லத்திற்கு அனுப்புவதை ஆதரித்து பெயர்தாங்கி முஸ்லிம் ஒருவள் புர்கா அணிந்த நிலையில் பேசுகிறாள்.
இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவனுக்காக உயிரை விடும் காரியத்தை விட தனது பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வதுதான் அல்லாஹ்விற்கு மிக விருப்பமான காரியம் என இஸ்லாம் கூறுகிறது.
எவ்வளவு கோபம் வந்தாலும் சரி அவர்களை பார்த்து "ச்சீ" எனும் வெறுப்பை வார்த்தையை கூட கூறக்கூடாது என கட்டளை இட்ட மார்க்கம்.
பெற்றோர்களை மனதளவிலும்,உடலளவிலும் துன்புறுத்துவதை பெரும்பாவம் என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
இப்படி இருக்க புர்கா அணிந்த நிலையில் இந்த பெண் இவ்வாறு பேசுவதை முஸ்லிம்களான நாம் ஆதரிக்கவில்லை என்பதனை முதலில் கூறிக்கொள்கிறோம்.
இந்த பெண் பேசிய பேச்சிற்கு அங்குள்ள மக்களே நல்லதோர் பதிலடியை கொடுத்துவிட்டார்கள்.
கணவன் சம்பளம் பத்தாது எனக்கூறிய அந்த மடமைப் பெண்ணுக்கு "25,000 ரூபாய் சம்பாதிக்கிற.45 ரூபாய் செலவு பன்னா என்ன ஆகிற போகுது?"என முதல் கேள்வியை வாயடைக்க வைத்தார் ஒரு தாய்மார்.
மாமியாரை அநாதை ஆசிரமத்திற்கு அனுப்புகிறோம் என கூறவேண்டாம்,ஆசிரமத்திற்கு தான் நாங்கள் பணம் கொடுக்கிறோமே?என உளரிய அவளது பேச்சிற்கு..
"மாமியாரை பற்றி இவ்ளோ பேசுறியே உன் தாய் தந்தையர் எங்கம்மா இருக்காங்க?" என கேட்ட கேள்விக்கு..
"அவங்க கூட நான் சண்டை போட்டு அனுப்பிவிட்டேன்" என்றதும் அவள் வாயாலேயே அவள் சபையில் அசிங்கப்பட்டார்.மக்கள் சிரித்துவிட்டனர்.
மேலும் "என் தனிப்பட்ட விசயத்தை பொதுவில் கூறமுடியாது" என அவள் கூறியதும்,
"போதும்மா போதும்.நீ ஒரு விசயத்தை சொன்னதே போதும்" என கூறி குட்டு வைத்து அவளை திக்குமுக்காட வைத்தார்.
ஆக இதிலிருந்து தெரியவருவது.10 மாதம் சுமந்து சிரமமெடுத்து ஆளாக்கிய பெற்றோர்களை யாராவது அசிங்கப்படுத்த நினைத்தால் அவர்கள் பொதுவில் அசிங்கப்பட்டு தலைகுனிய நேரிடும் என்பது மட்டும் இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.
விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி அமைப்பாளர்கள் இனிமேலாவது இதுபோன்று பைத்தியக்கார தனமாக பேசுபவர்களை தங்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கவேண்டாம் என்பதனை கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments