Subscribe Us

header ads

இலங்கையில் கணவன்மாரால் 128 மனைவியர் கொலை - ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியம்

 


இலங்கையில் கணவன்மாரால் 128 மனைவியர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

விபத்துகள், தற்கொலைகள் மற்றும் பெண்கள் என்ற காரணத்துக்காகக் கொலைசெய்யப்படுதல் என்ற வகையில் தகவல்களைத் திரட்டும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வில் மேலும் தெரியவந்ததாவது, இலங்கையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் 243 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மரணங்களில் 62 சதவீதமானவை கொலைசெய்யப்பட்ட பெண்களின் சட்டபூர்வ கணவராலோ அல்லது முன்னாள் கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

Post a Comment

0 Comments