Subscribe Us

header ads

ACMC கல்பிட்டி அமைப்பாளர் A.R.M. முஸம்மிலின் அபிவிருத்தி இம்முயற்சியை தடை செய்தது யார் ?



கடந்த நான்கு மாதங்களுக்கு முன் கல்பிட்டி நகரில் இரண்டு வீதிகளுக்கு காபட் அமைப்பதற்காக கல்பிட்டி ACMC அமைப்பாளர் A.RM.முஸம்மில் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் ,மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவருமான அல் ஹாஜ் றிஷாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதிக்கீட்டின் மூலம் அவருடைய நேரடி பங்குபற்றலுடன்,ACMC புத்தளம் மாவட்ட அமைப்பாளர்M.A.R.அலிசப்ரி,பாரளுமன்ற உறுப்பினர் கெளரவ M.H.M.நவவி ,முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா,ACMC உயர்பீட உறுப்பினர் டொக்டர் இல்யாஸ் அவர்கள் மேலும் முக்கிய கட்சி முக்கியஸ்தர்களால் அதிகமான பொதுமக்களுக்கு முன்னிலையில் ,கல்பிட்டி பிரதேச சபை அருகிலிருந்து செல்லும் முகத்துவார வீதி புதிய பஸ் நிலையம் வரையிலான வீதியை காபட் வீதியாக அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.


ஆனால் நேற்று அவ்வீதியை காபட் வீதியாக அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசிய தலைவரின் ஒதுக்கீட்டில் முஸ்லிம் காங்கிரஸ் வடமேல் மாகாண சபை உறுப்பினர் M.H.M .நியாஸ் அவர்களால் அவருடைய கட்சி உறுப்பினர்களாலும் அடிக்கல் நாட்டப்பட்டு நாளை அல்லது அடுத்த நாள் காபட் வீதி அமைப்பதற்கான வேளைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அவ்வாறு எனின் ACMC கல்பிட்டி அமைப்பாளர் A.R.M. முஸம்மிலின் அபிவிருத்தி இம்முயற்சியை தடை செய்தது யார் ? அல்லது இது வெருமனே ஒரு ஏமாற்று வேலையா ? இந்த நிலமையா அல் அக்ஷா முன்னால் உள்ள வீதிக்கும் வரும்..

இதனால் பாதிப்படையப்போவது பொது மக்கள் அல்ல ACMC கட்சியே என்பதை தலைமை புரிந்து கொள்ள வேண்டும் .அவ்வாரு எனில் புத்தளம் மாவட்ட ACMC அமைப்பாளரும். பத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இதற்கு பதில் சொல்வார்களா? எங்கள் ஊருக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிதிக்கு என்னவாகும் இந்த நிதி மீண்டும் வேறு வழியில் எமது ஊருக்கு கிடைக்குமா ? அல்லது கல்பிட்டிக்கு ACMC யின் அபிவிருத்திகள் நிறுத்தப்பட்டுள்ளதா இவ்வாறு மக்கள் பல கேள்விகளை கேட்கிறார்கள்.

-Rizvi Hussain-





Post a Comment

0 Comments