Subscribe Us

header ads

பத்து இலட்சம் சீனர்களுக்கு இலங்கை வீஸா வழங்கிளால் நிலை எப்படி இருக்கும் (சுவாரஷ்யமான கற்பனைக்கதை)


பத்து இலட்சம் சீனர்களுக்கு வீஸா வழங்கப் போவதாகவும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 18000 ஏக்கர் பரப்பளவுள்ள காணியை சீனாவுக்கு தாரை வார்க்கப் போவதாகவும் இணையத் தளங்களில் செய்தி அடிபடுகிறது.அடேங்கப்பா பத்து இலட்சமா ?நினைக்கவே தலை சுற்றுது..அப்படி நடந்தால் இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளின் பின் இலங்கைச் சமூகம் எப்படி இருக்கும்..ஊடகங்களும் மக்களும் என்ன பேசிக் கொள்வார்கள் ..ஒரு கற்பனை...
1 "அவள் சீனப் பொடியனை லவ் பண்றாள்டி" இரண்டு பேரையும் ருகுனுகுமாரி ட்ரெய்ன்ல பார்த்தேன்..பெயர் என்னமோ "ஜம்பிங்" ஆம்...எத்தனை பேர் நாயா பேயா அலைஞ்சாங்க..பார்த்தியா சீனக்காரன்ட அதிஷ்டத்தை....(இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு போனார்கள்)
2 கரப்பான், பல்லி , எலி இல்லாத மாவட்டமாக ஹம்பாந்தோட்டை தேர்வு..ஜனாதிபதி பெருமிதம்
அனைத்தையும் சீனர்கள் தின்று தீர்த்ததால் இயற்கைச் சமனிலையில் குழப்பம்...மாவட்டத்தில் எஞ்சி இருக்கும் பதினைந்து விவசாயிகளும் கவலை...( பத்திரிகை செய்தி )

3 iPhone 25 plus வகை போன் உடன் இலங்கை வந்த வர்த்தகர் கட்டுநாயக்கா சுங்க பிரிவில் தடுத்து வைத்து விசாரணை..( இலங்கையர்கள் சீன போன்களை மட்டுமே பாவிக்க வேண்டும் என்ற சட்டமூலம் 2021 இல் பாராளுமனறத்தில் நிறைவேற்றப்பட்டது ஞாபகம் இருக்கலாம்)
4 இலங்கைக் கிரிக்கட் அணியில் குறைந்தது ஐந்து சீனர்களாவது இடம் பெற வேண்டும்.சீனா அரசாங்கம் வற்புறுத்தல்..பிரதமரும் பச்சைக் கொடி....
5 இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தியது பாரத தேசம், சீனாவின் காலனி ஆகிவிட்டதாகவும் இந்தியா விசனம்....
இலங்கை உள் விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு எந்த அருகதையும் இல்லை - பொதுபல சேனா...

6.இலங்கையைச் சாப்பிட்டு ஏப்பம் விட்ட சீனா என்னும் ஏகாதிபத்தியம் ( ஆனந்த விகடன் சிறப்புக் கட்டுரை )
7 சீனர்களும் இலங்கையர்களும் அதிகமதிகம் கலப்புத் திருமணம் செய்து கொள்வதன் விளைவாக இலங்கையர்களின் நிறத்தில் சீன முக சாயலில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உருவாகி இருக்கின்றனர்..இவர்கள் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.இலங்கையின் பூர்வீக குடிகளாய் இருக்கும் சக மாணவர்களே இவர்களைக் கண்டபடி கேலி செய்கின்றனர்.இதனால் இச் சிறார்களின் பிஞ்சு மனம் பாதிக்கப்படுகிறது..இதனை தடுக்க சமூகத்தில் ஆக்கபூர்வமான செயல்திட்டங்கள் தேவை..( லங்கா தீப பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தின் உள்ளடக்கத்தில் இருந்து )
8 எங்கள் பக்கத்து வீட்டில் கணவர் சிங்களவர்.. மனைவி சீனப் பெண்..அவர்களின் பிள்ளைக்கு பேர் வைக்கும் விழாவுக்கு என்னை அழைத்து இருந்தார்கள்..விருந்து தடபுடலாய் இருந்தது.விருந்து முடிய அதில் உபயோகித்த ஒரு பீங்கானை தேர்வு செய்தார்கள்..ஒரு வயதான சீனர் அதை தூக்கிப் போட்டார்.." சடாங்" என்ற சத்ததுடன் விழுந்து நொருங்கியது..அவர்களின் பிள்ளைக்கு "சட்டாங்" என்று பெயர் வைத்தார்கள்...முழுப் பெயர் சட்டாங் விக்ரமசூரிய..
9 ஒலிம்பிக்கில் இம் முறை இலங்கைக்கு மூன்று தங்கப்பதக்கங்கள்..குசுமாவதி லியாங், பண்டாரகே ஜின் பிங், துவான் முதியன்ஸலாகே பின்யிங் ஆகியோர் தங்கம் வென்றனர்.
10 சமூக வலைதளங்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டு பதினெட்டு ஆண்டுகள் நிறைவை ஒட்டி இதற்கு மூளையாய் இருந்த சீனப் பொறியியலாளர்களை பொன்னாடை போர்த்தி கெளரவிக்கும் விழா அலரிமாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நாளை மாலை நடைபெற உள்ளது.

-Zafar Ahamed-

Post a Comment

0 Comments