M. H. M. நஸார் அவர்கள் கல்பிட்டி புது குடியிருப்பு-பெரிய குடியிருப்பு பகுதிகளின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உள்ளூராட்சி வேட்பாளராக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் M. H. M. நவாவி அவர்களின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார்...அத்துடன் மண்டலகுடா-வன்னிமுந்தல் மக்கள் காங்கிரஸ் வேட்பாளராக ஜனாப் முஹம்மத் முஸம்மில் இம்முறை களமிறங்குவார் என்பது ஏற்கனவே யாவரும் அறிந்ததே...
இந்நிகழ்வின்போது புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன் யஹ்யா உட்பட ஜனாப் நஸார் அவர்களின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்...
மேற்படி நிகழ்வு எமது பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் வாசஸ்தலத்தில் இடம் பெற்றது...
இன்ஷா அல்லாஹ் அடுத்து வரப்போகின்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு பலப்பரீட்சையில் ஈடுபட கூடும் என்ற செய்தி தற்சமயம் கட்சி வட்டாரத்துக்குள் அடிபடுகிறது...
இதன் ஓர் அங்கமாகவே கல்பிட்டி பகுதியின் பலம் பொருந்திய வேட்பாளர்களாக முஸம்மில்-நஸார் இருவரும் கட்சியால் களமிறக்கப்படுவார்கள் என்று நம்ப படுகிறது...
-IBRAHIM NIHRIR-
-IBRAHIM NIHRIR-



0 Comments