மதவாச்சி இசிபத்தன மகாவித்தியாலயத்தை உத்தியோகபூர்வமாக மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் நேற்று (04) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அறிவு மைய சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் வடமத்திய மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டில் ரூபா பத்து லட்சத்து 160 ரூபா செலவில் கெபித்திகொல்லாவ கல்வி வலயத்தில் இப்பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கல்வி நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நவீன தொழில்நுட்பக்கூடம், நிர்வாகக்கட்டிடம் மற்றும் மூன்றுமாடி வகுப்பறைக் கட்டிடம் ஆகியவற்றை ஜனாதிபதி அவர்கள் மாணவர்களிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் கல்லூரி வளாகத்தில் ஜனாதிபதி அவர்கள் நாக மரக்கன்று ஒன்றை நட்டினார். இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் பௌத்த பிரிவுத் தலைவர் கலாநிதி சங்கைக்குரிய கடவத்கமுவ பிரியரத்ன தேரர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, வட மத்திய மாகாண முதலமைச்சர் பி பீ திசாநாயக்க முதலமைச்சர் பேசல ஜயரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 Comments