வட மாநிலங்களின் சில பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சியைப் போக்கி மழை பெய்ய வேண்டி பல்வேறு வழிபாடுகள் அங்கு நடத்தப்படுவதுண்டு. தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்காக நாய்களுக்குத் திருமணம் செய்யும் வழக்கம் காணப்படுவதுண்டு.
இந்த வகையில், இந்தூரின் முஷாகேதி பகுதியைச் சேர்ந்தவர்கள் மழையின் கடவுளான இந்திரா தேவியை சமாதானப்படுத்தும் நோக்கில் ஆண்கள் இருவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்தத் திருமணத்தில் மணப்பெண் என யாரும் கிடையாது, அவர்கள் இருவருமே மணமகன்கள்தான் என்று விளக்கம் கொடுக்கிறார்கள் இந்தூர் பகுதி மக்கள்.
மேலும், மழை வேண்டி திருமணம் செய்து கொண்ட ஆண்கள் இருவருமே முன்னதாக திருமணம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments