Subscribe Us

கல்பிட்டி சின்னக்குடியிருப்பு மையவாடி காணியின் அவல நிலை (பொது மக்களே இது உங்களின் கவனத்திற்கு) படங்கள் இணைப்பு


கல்பிட்டி மணல்தோட்டத்தில் காணப்படும் சின்னக்குடியிருப்பு மையவாடி காணியில் பொது மக்களால் குப்பை கூலங்கள் கொட்டுவதாக நிர்வாகத்தினர் மிகவும் மனவேதனையுடன் கூறுகின்றனர் தாங்கள் எவ்வளவு தான் சுத்தப்படுத்தினாலும் பொது மக்களுக்கு எச்சரித்தாலும் சுற்றி வர மதில் அமைக்கப்பட்டிருந்தும் மதிலையும் தாண்டி குப்பைகளை தட்டுகிரார்களாம் ஒவ்வொரு நாளும் இரவு நேரம் அல்லது அதிகாலை நேரங்கிலேயே இவ்வாரான செயல்பாடுகளில் ஈடுபடுகிரார்கள்.

தற்போது ஊர்பூராகவும டெங்கு நோய் வேகமாக பரவிவருவதால் இவ்வாரான செயல்பாடுகளால் பாதிப்படைய போவது எங்கேயோ இருக்கும் நிர்வாகத்தினர் அல்ல அருகில் இருக்கும் பொதுமக்களே ,ஒரு சிலர் செய்யும் இவ்வாரான செயல்களால் அருகிலுள்ள அனைவருமே பாதிப்படைவார்கள் எனவே இதற்கெதிராக MOH காரியாலத்தில் புகார் செய்து இவர்களுக்கெதிராக அவசரமாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அயலுள்ளவர்கள் நிர்வாகத்திடம் தெரிவிக்கின்றனர்.

நிர்வாகமும் இவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினர்.

-Rizvi Hussain- (KV REPOTER)



















Post a Comment

0 Comments