Subscribe Us

மானுடம் தழைத்தோங்க மாண்புகள் காத்திருவோம் நிகழ்ச்சி இனிதே நிறைவு (படங்கள் இணைப்பு)


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் இன்றைய சமூகத்திற்கு அவசரமாகவும் அவசியமானதுமான இந்த காலத்தில் மாத்திரமல்ல எந்தக்காலத்திலும் முஸ்லீம்கள் சமூகமாகவும் ஏனைய சமூகத்தினடனும் எவ்வாறு சமூகமாக சுமூகமாக வாழ்வது என்று இஸ்லாம் கூறுகிறது என்ற கருப்பொருளில் மானுடம் தழைத்தோங்க மாண்புகள் காத்திருவோம் என்ற தலைப்பில் மெளலவி சியால்தீன் மதனி,மெளலவி உவைஸ் இஸ்லாஹி, அதே போல் அகில இலங்கை ஜமாத்தே இஸ்லாமி உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர் அவர்களும் கடந்த 25-08-2017 பி.ப.4.00 தொடக்கம் இரவு 9.30 மணி வரை சிந்தனையை தூண்டும் வகையில் அழகாக உரை நிகழ்த்தி சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வில் இயக்க வேறுபாடு இல்லாமல் அதிமான ஊர்மக்கள் இரவு வரை கலந்து கொண்டு அமைதியாக உரைகளை கேட்டு கொண்டிருந்தார்கள் .இந்நிகழ்வில் அதிகமான தப்லீக் ஜமாத் உறுப்பினர்களும் கலந்து கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.

-Rizvi Hussain- (KV REPOTER)














Post a Comment

0 Comments