கிரீஸ் நாட்டில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் ஏதென்ஸ் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள் குலுங்கின.
மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
அங்கு 5.4 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. ஏதென்ஸ்சின் வடக்கில் 120 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பிரோகோபியன் நகரை மையமாக வைத்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. கடந்த ஜனவரியில் அங்குள்ள லோனியன் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது செபோலோனி யாவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள் சேதமாகின.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice
0 Comments