இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களை தேர்வு செய்ய நடந்த ஏலத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த ஏழை ஆட்டோ ஓட்டுநர் முஹம்மது கவுஸ் அவர்களின் மகன் முஹம்மது சிராஜ் (வயது 22) அவர்களை சன் ரைசர்ஸ் அணி 2.6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது...
இந்திய அணியில் விளையாடிய பிரபல வீரர்களை யாரும் ஏலத்தில் எடுக்க விரும்பாத சூழலில் இந்த இளம் வீரர் முஹம்மது சிராஜ் தேர்வு பெற்றது பலருக்கும் வியப்பாக உள்ளது.
20 லட்சம் ஆரம்ப கட்டணமாக நிர்ணயித்து நடைபெற்ற ஏலம் 13 முறை உயர்த்தி கேட்கப்பட்டு இறுதியில் 2.6 கோடிக்கு எடுத்த ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி சார்பில் விளையாடவுள்ளார்..
0 Comments