நேற்று ஒரு பெரியவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெற்ற நிலையம் ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு இன்று இங்கு நடந்த பரீட்சையின் பெறுபேறுகளை நாளை காலையில் இணையத்தில் பார்க்கலாமே! அது உண்மையா என்று கேட்டார்.
இல்லை. இல்லை. ஓரிரு மாதங்கள் வரை செல்லும் என்றேன்.
அதற்கு அவா் இல்லை இல்லை எனக்கு ஒருவா் பார்க்க முடியும் என்று சொன்னார்.
அது தான் உங்களிடம் கேட்டேன் என்றார். பெறுபேறுகளை அறிந்து கொள்வதில் ஆா்வமாக இருக்கும் அவரைப் பார்த்து யாருடைய பெறுபேற்றை அறிய வேண்டும் என்று கேட்டபோது எனது மகள் இம்முறை, நேற்று நடந்த பரீட்சையை எழுதியிருக்கின்றாள்.
பரீட்சை முடிந்த பின்னர் பொலிஸ் பாதுகாவலுடன் எழுதிய விடைப்பத்திரங்களை கொண்டு மகள் சொன்னதாக குறிப்பிட்டார். அதற்கு நான் அவரிடம் பெரியவரே ஒன்றும் அவசரப்பட வேண்டாம். அனைத்து விடைப்பத்திரங்களையும் திருத்தி புள்ளிகளை ஓரிரு மாதங்களுக்குள் தான் வெளியிடுவார்கள். எனது சகோதரியின் மகனும் (மருமகன்) நேற்று எழுதியிருக்கின்றார் என்று கூறியி உடன் பெரியவா் உங்களது மருமகள் எத்தனையாம் ஆண்டு படிக்கின்றார் என்டு திருப்பிக் கேட்டார்…..
இந்தக் கேள்வி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது…..
ஒரு தந்தை தனது மகள் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் எழுதி விட்டு வந்திருக்கின்றாள்.
ஆனால் அவருக்கு அவள் என்ன பரீட்சை எழுதியிருக்கின்றாள்?
அதற்கு என்ன பெயா்?
அதனை எத்தயைாம் ஆண்டில் நடாத்துகின்றார்கள்? போன்ற எந்த விபரங்களும் தெரியாமலா இருக்கின்றார்.
நாம் அவரை குழந்தை வளா்ப்பில் அவா்கள் காட்டும் ஆா்வத்தை நாம் என்னவென்டு சொல்வது???
இது ஒரு சம்பவம் மட்டும் தான்,
ஆனால் சமூகத்தில் நிறையப் பெற்றோர்கள் இந்த நிலையில் இருப்பதையே பாடசாலைகளில் அதிபா்களால் நடாத்தப்படும் பெற்றார் ஆசிரியா் சங்கப் பொதுக் கூட்டங்கள் பறைசாற்றுகின்றன.
40 பிள்ளைகள் படிக்கும் வகுப்பிற்கு கூட்டம் நடாத்தினால் 20 பெற்றோர்கள் வருவது கூட இல்லை என்பதே உண்மை.
அப்படி வந்தாலும் 20ம் பேரில் குறைந்தது 15 போ் அம்மணிகள் தான். கேட்டால் அவா் பிசி. அதான் என்னை அனுப்பினார் என்று காரணம் வேறு…
எம்மவா்களுக்கு நாள்தோறும் பிசினால்,
நேரமில்லை, நேரமில்லை, நேரமில்லை தான்…..
* பேஸ்புக் பயன்படுத்த நேரமிருக்கின்றது.
* யூ டியூப் பயன்படுத்த நேரம் இருக்கின்றது.
* வாஸ்ட்அப் பாவிக்க நேரம் இருக்கின்றது.
* வானொலியில் பாடல் கேட்ட நேரமிருக்கின்றது.
* தொலைக்காட்சியில் நாள்தோறும் சீரியல், தினந்தோறும் திரைப்படங்கள் பார்க்க நேரமிருக்கின்றது. பிள்ளைகளை வேறு அறையில் தூங்க வைத்து விட்டு கணவன் மனைவி மட்டும் பார்க்கின்றார்களாம். பிள்ளை பார்த்தால் படிப்பு மண்ணாகிடுமாம் என்ற அக்கரை வேறு.
* 5 மணித்தியாலம் ஒதுக்கி 20க்கு 20 பார்க்க நேரம் இருக்கின்றது.
* ஒரு நாள் முழுக்கு நேரம் ஒதுக்கி ODI கிரிட்கட் பார்க்க நேரம் இருக்கின்றது.
* ஏன் சிலருக்கு 5 நாட்கள் ஒதுக்கி டெஸ்ட் மெட்ச் பார்க்க நேரம் இருக்கின்றது
* இது மட்டும் மொழி தெரியாத Hollywood, Bollywood பார்க்கக் கூட நேரம் இருக்கின்றது.
* டவ்சரே போடாமல் பெல்ட்க்காக அடிச்சிக் கொள்ளும் Worldwide Entertainment (WWE) ஐ (ரெஸ்லினை) தொடராக பார்க்க நேரம் இருக்கின்றது.
* தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டால் விடிய விடிய கண் விளித்து இருந்து முடிவுகளை அறிய நேரம் இருக்கின்றது.
* ஒபாமா முதல் ஓசாமா வரையும், சானியா மிர்ஷா முதல், மெரியா ஷபபோவா வரையுமு் தெரிந்து வைத்திருக்க நேரம் இருக்கின்றது.
ஆனால்
• தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட செல்வங்கள்,
• என்ன படிக்கின்றார்கள்,
• எப்படிப் படிக்கின்றார்கள்,
• யார் யாருடன் பழகின்றார்கள்,
• கல்வியில் அவா்களது அடைவு மட்டம் என்ன,
• ஒழுக்கத்தில் அவா்கள் எந்தந் தரத்தில் இருக்கின்றார்கள்?
• மார்க்க விடயங்களில் அவா்கள் தரம் என்ன?
போன்ற எந்த விடயங்கள் உட்பட இன்னோரன் விடயங்களைக் கண்காணிப்பதற்கு மட்டும் எம்மவா்களுக்கு நேரம் இல்லாமல் போய்விடுகின்றது.
6 மாணித்தியாலங்கள் மட்டும் பாடசாலையில் இருக்கும் மாணவா்கள், 18 மணித்தியாலங்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றார்கள் என்பதை மறந்து அதிபா்களையும், ஆசிரியா்களையும் குறை கூறுவதைப் பார்க்கின்றோம்….
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளாராவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். (புகாரி:2409)
-Mujas Redbana-
0 Comments