உண்மையில் முஸ்லிம்கள் கடந்த பொதுத்தேர்தலில் முஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களித்தமைக்கு பறந்துபட்ட காரணங்கள் அடிப்படையாக அமைந்திருந்தமை கண்கூடு.. என்றாலும் மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தமை இனவாதிகளுக்கு முஸ்லிம்களாகிய நாம் சிறந்த பாடத்தினை புகட்டியாகவேண்டிய தருணம் என்பதினையும் உணர்ந்திருந்தமையாகும். குறிப்பாக முஸ்லிம் காங்ரஸ் பல இடங்களில் பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து செயற்பட்டிருந்தது.
அவ்வாறான செயற்பாடுகள் பல இன்றும் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்ற வேளையில் தேசியபட்டியல் என்ற தந்துராபாயமும் இன்றுவரை பேசப்பட்டு வருகின்றமைக்கு அப்பங்கீட்டில் இருந்து வருகின்ற குறைபாடும் கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்த்து கேள்வி கேற்க வக்கற்ற உயர்பீடமுமே காரணம் என்றால் மிகையாகாது. தலைவரானவர் தேசியப்பட்டியல் தருவதாக வாக்களித்த பிரதேசங்கள் அட்டாளைச்சேனையும் வன்னி மாவட்டமும் ஆகும். அட்டாளைச்சேனையை பொருத்தமட்டில் மாகாண அமைச்சுப்பதவி நிறைவடைந்ததும் தேசியப்பட்டியல் வழங்கப்படும் என வாக்களிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் வன்னிமாவட்டம் தமது பிரதிநிதித்துவத்தை இழந்து தவிக்கிறது. தேர்தல் முடிந்து ஒருவருடமாகியும் இன்றுவரை கொடுத்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது.
வன்னயைியை சேர்ந்த உயர்பீட உறுப்பிணர்கள் கூட அற்ப உயர்பீட பதவி பறிக்கப்படும் என பயந்து மௌனிகளாக காலத்தை ஓட்டுகிறனர். திருகோணமலைக்கு தேசியப்பட்டியல் வழங்கியதில் கூட நியாயங்கள் இருந்தாலும் தலைவரின் நண்பருக்கு கொடுக்கப்பட்ட தற்காலிக ஆசனத்தை இன்றுவரை மீளப்பெறாமல் இருப்பதில் என்ன நியாயமிருக்கிறது,
வன்னிமாவட்ட கட்சிப்போராளிகளுக்கு ஏனையொரால் இழைக்கப்படுகின்ற அநீதியினை அறிந்திருந்தும் அறியாதவர்களாக வளம் வர நினைக்கும் வன்னி வயதுவந்த அரசியல், உயர்பீட உறுப்பினர்களே உங்களுக்கு பயம் எனில், முடியவில்லையெனில் இளைஞர்களாகிய எங்களிடம் தாருங்கள் எங்கள் தேசிய சொத்தாகிய கட்சியை பலப்படுத்த எதிரிகளுடன் மட்டுமல்ல கட்சியின் தலைமைத்துவத்தோடும் போராட தயாராகவே இருக்கிறொம். இது எமது மரம் நிழல் காய உரிமம் பெற்றவர்கள் நாங்களே, உரமிட்டவர்கள் நாங்களே,உயிரூட்ட நினைப்பவர்கள் இளைஞர்களாகிய நாங்களே! சிந்தியுங்கள் மூத்த போராளிகள் என கூறிக்கொள்பவர்களே உமக்கான,உமது கையாலாகாதனத்திற்கான பதிலடி வெகுதொலைவிலில்லை...
-இளம்போராளி சிபாஸ் நசார்-
0 Comments