ரியோ ஒலிம்பிக்கில் 800 மீட்டர் ஓட்டத்தில் கென்ய வீரர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தொடர்ந்து 2 முறை தங்கம் வென்று 52 வருட சாதனையை முறியடித்தார்.
யோ ஒலிம்பிக்கில் தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தடகளத்தில் ஒவ்வொரு நாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் தங்கப் பதக்கம் வாங்கியதுடன் புதிய சாதனைகளையும் படைத்து வருகிறார்கள். இந்த வரிசையில் கென்யாவின் 800 மீட்டர் ஓட்டப் பந்தய வீரர் டேவிட் ருடிசாவும் சாதனைப் படைத்துள்ளார்.
இவர் கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இவர் தற்போது ரியோ ஒலிம்பிக்கிலும் இதே பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 42:15 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார். இதன்மூலம் 52 வருட கால ஒலிம்பிக் சாதனையை முறியடித்தார்.
அல்ஜீரியா வீரர் ஒரு நிமிடம் 42:61 வினாடிகள் கடந்து 2-வது இடம் பிடித்தார். இது அந்நாட்டின் தேசிய சாதனையாகும். அமெரிக்க வீரர் கிளெய்டன் மர்பி ஒரு நிமிடம் 42:93 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இது அவருடைய தனிப்பட்ட சிறந்த ஓட்டமாகும்.
இதற்கு முன் நியூசிலாந்து வீரர் பீட்டர் ஸ்னெல் 1964-ம் ஆண்டு தொடர்ந்து இரண்டு முறை ஒலிம்பிக்கில் 800 மீ்ட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதை கென்யா வீரர் முறியடித்துள்ளார்.
0 Comments