கைக்குள் சென்றிருப்பவர்கள் இராவணன் வம்சத்தை சேர்ந்தவர்கள் எனவும் அதனால் அவர்களை இவ்வாறு குகைக்குள் அழைத்து செல்வதாகவும் அப்பெண் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு குகைக்குள் சென்றவர்களுள் சித்த சுயாதீனமற்ற ஒருவரும் காணப்படுவதுடன் அவர் இராவணன் எல்ல பிரதேசத்துக்கு அருகிலுள்ள கரந்தகொல்ல பிரதேசத்தை சேர்ந்தவரென தெரிய வந்துள்ளது.
குறித்த பெண் மொறட்டுவ பிரதேசத்தை சேர்ந்தவரெனவும் ஏனையவர்கள் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இப்பெண் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் முற்பகல் 7.30 மணியளவில் குகைக்குள் சென்றுள்ளனர்.இச்சந்தர்ப்பத்தில் பிரதேசவாசிகள் குகைக்கு அருகில் கூடியிருந்தமையினால் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு எல்ல பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
குகையினுள் சென்றுள்ள பெண் தெரிவிக்கையில் இராவணன் இக் குகைக்குள் இருந்தால் அவருக்கு உரிய சிகிச்சையளித்து விட்டு இன்று (31) வருவதாக தெரிவித்தார்.
இதேவேளை, இக்குகையினுள் சுமார் 400 அடி பள்ளமொன்று காணப்படுவதோடு விசாலமான குளமொன்றும் காணப்படுவதாக அதற்குள் சென்ற பிரதேசவாசிகள் தெரிவித்ததோடு அதனை பார்வையிட வரும் உல்லாச பயணிகளிடம் தாம் பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களை குகையினுள் அழைத்து செல்வதாகவும் தெரிவித்தனர்.
இக்குழுவினரின் பயணம் தொடர்பில் பதுளை தொல்பொருளியல் ஆராச்சியாளர் அலுவலகத்துக்கு அறிவிக்கப்பட்டதனையடுத்து அவர்கள் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் 6.15 மணியளவில் குகையினுலிருந்து வெளியில் வந்திருந்த மந்திரவாதி பெண் உள்ளிட்ட குழுவினர் மீது சுமார் 500க்கு அதிகமான பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனினும் குறித்த பெண் மாற்றுவழியொன்றினூடாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என என தெரியவந்துள்ளது.












0 Comments