Subscribe Us

header ads

பறந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிப்புச் சம்பவம் பாரிய துளைக்கூடாக பயணி வீழ்ந்து உயிரிழப்பு! (படங்கள் இணைப்பு)

பறந்து கொண்­டி­ருந்த சோமா­லிய பய­ணிகள் விமா­ன­மொன்றில் ஏற்­பட்ட வெடிப்­பினால் அவ்­வி­மா­னத்தில் பாரிய துளை­யொன்று ஏற்­பட்­டுள்­ளது.


அத்­ து­ளைக்கு ஊடாக பய­ணி­யொ­ரு­வரும் கீழே வீழ்ந்து இறந்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 

டால்லோ எயார்லைன்ஸ் நிறு­வ­னத்­தினால் இயக்­கப்­பட்ட பிளைட் டி3159 எனும் மேற்­படி விமானம், நேற்­று­முன்­தினம் இரவு சோமா­லிய தலை­நகர் மொகா­டி­ஷு வி­லி­ருந்து டிஜி­பௌட்டி நாட்டின் தலை­நகர் டிஜி­பௌட்டி சிற்­றியை நோக்கிப் பறந்து­ கொண்­டி­ருந்­தது.

எயார்பஸ் ஏ 321 ரகத்தைச் சேர்ந்த இவ்­ வி­மா­னத்தில் 74 பயணிகள் இருந்­தனர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


அப்­போது திடீ­ரென வெடிப்புச் சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­ற­துடன் தீயும் பர­வி­யது. இதனால், விமா­னத்தின் பாரிய துளை ஏற்­பட்­டது. இச்­சம்­ப­வதில் இரு பய­ணி­க­ளுக்கு காயங்கள் ஏற்­பட்­டன.  

அத்­துடன் விமா­னத்தில் ஏற்­பட்ட துளைக்கு ஊடாக பயணி ஒருவர் வீழ்ந்து உயி­ரி­ழந்­துள்ளார் என சோமா­லிய அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். அந்­ந­பரின் சட­லத்தை கிரா­ம­வா­சிகள் மீட்­டுள்­ளனர். 

வெடிப்புச் சம்­பவம் இடம்­பெற்­ற­போது அவ்­வி­மானம் 12,000 முதல் 14,000 அடி வரை­யா­ன­ உ­ய­ரத்தில் பறந்­து­கொண்­டி­ருந்­தது.


பின்னர் அவ்­வி­மானம் அவ­ச­ர­மாக மீண்டும் மொகா­டிஷு நக­ருக்கு  திருப்­பப்­பட்டு பாது­காப்­பாக தரை­யி­றக்­கப்­பட்­டது.

இது ஒரு குண்­டு­வெ­டிப்­பாக இருக்­கலாம் என தான் கரு­து­வ­தாக மேற்­படி விமா­னத்தின் விமானி தெரி­வித்­துள்ளார். 

சோமா­லிய பிர­தமர் ஒமர் அப்­திர்­ரஷீட் அலி ஷார்­மார்க்­கேயின் பேச்­சாளர் ஒருவர் இது தொடர்­பாக கூறு­கையில், எத்­த­கைய வெடிப்புச் சம்­பவம் என்­பது குறித்து முரண்­பா­டான பல தக­வல்கள் இது தொடர்­பாக விசா­ரணை நடை­பெ­று­கி­றது  எனக் கூறியுள்ளார்.  

இவ்வெடிப்புக்கான காரணத்தை உடனடியாக கூற முடியவில்லை என டால்லோ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹம்மத் இப்ராஹிம் யாசின் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments