Subscribe Us

header ads

ஆளில்லா விமானங்களைத் தாக்குவதற்கு கழுகுகளுக்குப் பயிற்சி

ஆளில்லா விமா­னங்­களை (ட்ரோன்) தாக்­கு­வ­தற்கு கழு­கு­க­ளுக்கு நெதர்­லாந்து  பொலிஸார் பயிற்­சி­ய­ளிக்­கின்­றனர்.


ஆளில்லா விமா­னங்­களை வானி­லேயே எதிர்­கொண்டு கைப்­பற்றி, அவற்றை தரைக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­காக இப்­ ப­யிற்சி அளிக்­கப்­ப­டு­கி­றது. இதன்­போது பிடிக்­கப்­பட்ட வீடி­யோவும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. 

இது தொடர்­பாக நெதர்­லாந்து பொலிஸ் அதி­காரி ஒருவர் கூறு­கையில், தொலைக்­கட்­டுப்­பாட்டுக் கரு­வி­யினால் இயக்­கப்­படும் ஆளில்லா விமா­னங்கள் கீழே விழுந்து மனி­தர்­க­ளுக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்­தக்­கூடும் என்­பதால் சில இடங்­களில் அவை பறப்­ப­தற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. 

இத்­த­டையை மீறி பறக்கும் ஆளில்லா விமா­னங்­களை தரையிறக்குவதற்கு கழுகுகள் பயன்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments