Subscribe Us

header ads

பெண்களை நிர்வாணமாக ஆடவைக்க முயற்சித்த போலி நடன ஆசிரியர் சிக்கினார்!

யுவதிகளை நிர்வாணமாக நடனமாட வைக்க முயன்ற போலி நடன ஆசிரியர் பண்டாரகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் திரைப்­படம் ஒன்றில் நடனக் காட்சியில் நடிக்கத் தேவையென பத்திரிக்கையில் விளம்பரமொன்றை வழங்கியுள்ளார்.இதன்போது மூன்று யுவதிகள் மற்றும் நபரொருவரை அவர் தெரிவு செய்துள்ளார்.
பின்னர் அவர்களுக்கு பயிற்சியும் வழங்கியுள்ள குறித்த நபர் , அவர்களிடம் அங்க அசைவுகளை சரியாக அவதானிக்கும் பொருட்டு நிர்வாணமாக நடனமாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவரிடமிருந்து தப்பித்த யுவதிகள் மற்றும் இளைஞர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பொலிஸார் அந்நபரையும் , அவரது மனைவியையும் கைதுசெய்துள்ளனர்.
நடன ஆசி­ரியர் என குறித்த நபர் தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்ள போதும் அவர் ஒரு மேல­திக நேர வகுப்பு ஆசி­ரியர் எனக் கூறப்­ப­டு­கின்­றது.

Post a Comment

0 Comments