Subscribe Us

header ads

புத்தளம் மாவட்டம் என்பது ''மீன்பிடிக்கு'' பெயர் போன ஒரு மாவட்டம் ஆகும்.

புத்தளம் மாவட்டம் என்பது ''மீன்பிடிக்கு'' பெயர் போன ஒரு மாவட்டம் ஆகும்.

அதிலும் குறிப்பாக கல்பிட்டி பகுதி மக்கள் வருடம் தோறும் இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர் . காரணம் இவர்களுக்கு இரண்டு கடல்களும் வாய்ப்பாக அமைந்துள்ளமை .

ஆனால் , துரதிஸ்ட்ட வசமாய் இவர்கள் இரவு பகலாய் மேற்கொள்ளும் இப்பணிக்கு உரிய சன்மானம் கிடைப்பதில்லை , மேலும் வேதனை என்னவெனில் இந்த ''மீன்பிடி மக்கள்'' கூட இதுவரை காலமும் இதனை உணரவில்லை .

அதாவது இவர்கள் உடலை வருத்தி பிடிக்கும் இந்த மீன்களை இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் வரும் ''கொள்வனவாளர்கள்'' நினைத்த விலைக்கே கொள்வனவு செய்கின்றனர் . குறிப்பாக ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு விலைகள் .

ஆக , இதனை கருத்தில் கொண்டு இவர்கள் பிடிக்கும் மீன்கள் அனைத்தும் ஒரு இடத்திற்கு வந்து , அந்த இடத்தில் இருந்து வியாபாரிகளுக்கு வழங்கப்படும் ''சந்தை பொறிமுறை'' ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் .

உதாரணமாய் நுரைச்சோலையில் அமைந்துள்ள ''மரக்கறி சந்தை'' போன்று மீன் சந்தை ஒன்றும் அமையுமாயின் ''மீனவர்கள் , கொமிசன் வியாபாரிகள், கூலி தொழிலாளிகள் , வாகனம் வைத்திருப்போர்'' என்று பலருக்கு நன்மையாய் போகும் , பலருக்கு பொருளாதாரமும் பெருகும் .

கல்பிட்டி தொடக்கம் முந்தல் , மற்றும் புத்தளம் நகர் பகுதி என்று மிகப்பெரிய எல்லைக்குள் மீன்பிடி நடைப்பெறுவதால் பொருத்தமான இடம் ஒன்றை தேர்வு செய்து இதனை அமைக்க முடியும் .

ஆக , நமது பகுதி அரசியல்வாதிகள் இதை கவனத்தில் எடுக்க வேண்டும் என்று அன்பாய் வேண்டுகிறேன் ...

-Mohamed Infass-

Post a Comment

0 Comments