Subscribe Us

மேலங்கி இல்லாமல் கடலுக்குச் செல்ல தடை!

மேலங்கிகள் இல்லாமல் கடலுக்குச் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு மேலங்கிகள் இல்லாமல் மீனவர்கள் கடலுக்குள் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

சர்வதேச கடற்பரப்பி்ல் மீன் பிடிப்பது தொடர்பில் மீனவர்களுக்கு சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மீன்படி துறையை அதிகரிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments