Subscribe Us

header ads

மாலைதீவு ஜனாதிபதி மீதான கொலை முயற்சி: பெண்ணொருவருடன் தங்கியிருந்த 18 வயதான சந்தேகநபர் தெஹிவளையில் சிக்கியது இவ்வாறுதான் .. (காணொளி)

மாலைதீவு ஜனாதிபதி அப்துல் யாமீன் மற்றும் அவரது பாரியார் பயணித்த அதிவேக படகில் கடந்த மாத இறுதியில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது

சவுதியில் ஹஜ் கடமைகளை நிறைவேற்றி நாடு திரும்பிய அவர் , ஹுல்ஹுலே தீவிலுள்ள விமானநிலையத்திலிருந்து படகின் மூலம் மாலே நோக்கி பயணித்து  பின்னர் அவர்களது படகு தீவை அடைந்தவுடனேயே வெடிப்பு இடம்பெற்றிருந்தது.

இச்சம்பவத்துக்கு காரணமான சந்தேகநபரை கைதுசெய்ய மாலைதீவு சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியிருந்தது. இந்நிலையில் இக் கொலை முயற்சியின் சந்தேகநபரொருவர் தெஹிவளை , நெதிமாலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அஹமட் அப்ரோஸ் எனப்படும் 18 வயதான இளைஞனொருவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் பெண்ணொருவருடன் தங்கியிருந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சுற்றிவளைப்பு தேடலொன்றில் அவர் கைதுசெய்யப்பட்டதுடன், கணனிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments