Subscribe Us

header ads

சோபித தேரருக்கு அஞ்சலி செலுத்த திரளாகச் சென்ற முஸ்லிம்கள் (PHOTOS)

மறைந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரருக்கு அஞ்சலி செலுத்த பெருந்தொகையான முஸ்லிம்களின் வருகை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவும் நூற்றுக்கணக்கானோர் அங்கு வருகை தந்திருந்ததாக சிங்கள ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை இனவாத சக்திகளுக்குத் துணை போன குறிப்பிட்ட ஊடகம் ஒன்று ‘இன ஐக்கியத்துக்கான உதாரணமாக’ இந்நிகழ்வை அவதானிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்பட்ட சோபித்த தேரர், பொது வேட்பாளரை உருவாக்குவதில் பாரிய பங்களிப்பு செய்து வந்ததோடு ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-Sonakar-




Post a Comment

0 Comments