அல்குர் ஆன் நிந்தனை வழக்கில் குற்றவியல் சட்டம் 219 A மற்றும் B பிரிவுகளின் அடிப்படையில் பொது பல சேனா பயங்கரவாதி ஞானசாரவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் தான் குற்றமற்றவன் என ஞானசார தெரிவித்துள்ளார்.
அவருக்கு எதிரான குற்ற அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஞானசாரவிடம் வினவப்பட்ட போதே குற்றத்தை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்த நிலையில் வழக்கு விசாரணை ஜனவரியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி மைத்ரி குணரத்ன மற்றும் சரத் சிறிவர்தன ஆகியோர் முஸ்லிம் சமூகம் சார்பாக இவ்வழக்கினைத் தாக்கல் செய்த மனுதாரருக்காக ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments