25 வருடங்களின் பின் இடம்பெற்ற சுதந்திரமான பொதுத் தேர்தலில் இராணுவப் பிடியிலிருந்து விலகுவதற்கான தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ள மியன்மார் மக்கள், ஆங் சான் சு கியின் NLD கட்சியை அமோக வெற்றிபெறச் செய்துள்ளனர்.
ஆசன எண்ணிக்கைகள் தொடர்பான இறுதி அறிவிப்பு வெளியாவதற்கு சில நாட்கள் செல்லும் எனினும் 75வீத வாக்காளர்களின் ஆதரவோடு தாம் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
மியன்மார் இராணுவ ஆட்சியின் பின்னணியில் பௌத்தவாதத்தைக் கையிலெடுத்த இலங்கைப் பயங்கரவாதி ஞானசாரவின் நண்பன் அசின் விராது ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்தும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் காரணமாக இருந்து வருகின்ற நிலையில் மியன்மார் முஸ்லிம்களின் ஒரே தெரிவாக அமைந்திருந்தது.
இந்நிலையில், அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவேன் எனும் வாக்குறுதியுடன் ஆங் சான் சு கி வெற்றிபெற்றுள்ளமையும் மியன்மார் முஸ்லிம்களுக்கு இது நம்பிக்கை தரும் விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments