மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் திருப்பெருந்துறையை சேர்ந்த தினேஸ்குமார் வினோதன் என்னும் 16வயது சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சிறுவன் மூன்று தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து காணாமல்போனதாகவும் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




0 Comments