கம்பளை மன்னர்கள் காலம் முதல் இடம்பெற்றுவரும் வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய கம்பளை பெரஹெரா, முன்னாள் அமைச்சர் காதர் ஹாஜியாரின் ஜனாஸாவை கௌரவிக்குமுகமாக மாற்று வீதியில் பயணித்தது.
கம்பளை அனைத்து விகாரை சங்க சம்மேளனத்தின் தீர்மானத்திற்கு அமைவாகவே இவ்வாறு குறித்தபெரஹெரா மாற்று வீதியினூடாக பயணித்தது.
பொத்தலபிடிய விஹாரையிலிருந்து வல்லஹகொடக்கு செல்லும் இந்த பெரஹெராவானது கம்பளையை தலைமையாக கொண்டு இந்நாட்டை ஆண்டு மன்னர்கள் காலம் முதல் பாரம்பரியமாக பெளத்தர்களால் மேற்கொள்ளப்படும் வழிபாடாகும்.
வழமையாக குறித்த பெரஹெரா பொத்தலபிடிய விகாரையிலிருந்து கண்டி வீதியினூடாக சென்று அம்பகமுவ சந்தியில் திரும்பி அம்பகமுவ வீதியூடாக வல்லஹகொட விகாரையை சென்றடையும்.
குறித்த அம்பகமுவ வீதியில் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதரின் வீடு இருக்கின்றது. நேற்றைய தினம் அவரது ஜனாஸா நிகழ்வுகள் இங்கு இடம்பெற்றமையினால் கம்பளை பெரஹெராவை மாற்று வீதியினூடாக கொண்டு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, கடந்த வருடம் இவ்வீதியினூடாக பெரஹெரா செல்லும்போது பெரஹெராவில் கலந்துகொண்டிருந்த பெளத்தர்களுக்கு காதர் ஹாஜியார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கம்பளை நகர பள்ளிவாசலுக்கு முன்பாக சிற்றுண்டிகளும் குளிர்பானங்களும் வழங்கியிருந்தார்.
1915 ஆம் ஆண்டு சிங்கள முஸ்லிம் கலவரமானது இந்த வரலாற்று பாரம்பரிய பெரஹெராவின்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் காதரின் ஜனாஸா நேற்று நல்லடக்கம்; மஹிந்த, டீ.எம்.ஜயரத்ன அஞ்சலி
கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அப்துல் காதரின் ஜனாஸா நேற்று மாலை 5 மணியளவில் கம்பளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கம்பளை டவுண் பள்ளிவாசல் மையவாடியில் நடைபெற்ற நல்லடக்கத்தில் அமைச்சர்கள், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை கண்டியில் தனியார் வைத்தியசாலயில் 79 ஆவது வயதில் முன்னாள் அமைச்சர் அப்துல் காதர் காலமானார். இந்நிலையில் அவரின் ஜனாஸா கம்பளையில் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. பெருந்தொகையான மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இறுதி மரியாதை செலுத்தினர். இதனால் அம்பகமுவ வீதியில் பெருந்தொகையான மக்கள் குழுமியிருந்தமையைக் காண முடிந்தது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் டீ.எம்.ஜயரத்ன ஆகியோர் ஜனாஸாவில் கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சரின் மறைவை முன்னிட்டு கம்பளை நகரில் வர்த்தக நிலையங்கள் பிற்பகல் மூடப்பட்டிருந்தமையைக் காண முடிந்தது.
அத்துடன் கம்பளைக்கு வரும் அரசியல் தலைவர்களைக் கருத்தில் கொண்டு பொலிஸார் நகரில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்களையும் மேற்கொண்டிருந்தனர்.

-எம்.எம்.எம்.ரம்ஸீன்
கம்பளை அனைத்து விகாரை சங்க சம்மேளனத்தின் தீர்மானத்திற்கு அமைவாகவே இவ்வாறு குறித்தபெரஹெரா மாற்று வீதியினூடாக பயணித்தது.
பொத்தலபிடிய விஹாரையிலிருந்து வல்லஹகொடக்கு செல்லும் இந்த பெரஹெராவானது கம்பளையை தலைமையாக கொண்டு இந்நாட்டை ஆண்டு மன்னர்கள் காலம் முதல் பாரம்பரியமாக பெளத்தர்களால் மேற்கொள்ளப்படும் வழிபாடாகும்.
வழமையாக குறித்த பெரஹெரா பொத்தலபிடிய விகாரையிலிருந்து கண்டி வீதியினூடாக சென்று அம்பகமுவ சந்தியில் திரும்பி அம்பகமுவ வீதியூடாக வல்லஹகொட விகாரையை சென்றடையும்.
குறித்த அம்பகமுவ வீதியில் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதரின் வீடு இருக்கின்றது. நேற்றைய தினம் அவரது ஜனாஸா நிகழ்வுகள் இங்கு இடம்பெற்றமையினால் கம்பளை பெரஹெராவை மாற்று வீதியினூடாக கொண்டு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, கடந்த வருடம் இவ்வீதியினூடாக பெரஹெரா செல்லும்போது பெரஹெராவில் கலந்துகொண்டிருந்த பெளத்தர்களுக்கு காதர் ஹாஜியார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கம்பளை நகர பள்ளிவாசலுக்கு முன்பாக சிற்றுண்டிகளும் குளிர்பானங்களும் வழங்கியிருந்தார்.
1915 ஆம் ஆண்டு சிங்கள முஸ்லிம் கலவரமானது இந்த வரலாற்று பாரம்பரிய பெரஹெராவின்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் காதரின் ஜனாஸா நேற்று நல்லடக்கம்; மஹிந்த, டீ.எம்.ஜயரத்ன அஞ்சலி
கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அப்துல் காதரின் ஜனாஸா நேற்று மாலை 5 மணியளவில் கம்பளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கம்பளை டவுண் பள்ளிவாசல் மையவாடியில் நடைபெற்ற நல்லடக்கத்தில் அமைச்சர்கள், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை கண்டியில் தனியார் வைத்தியசாலயில் 79 ஆவது வயதில் முன்னாள் அமைச்சர் அப்துல் காதர் காலமானார். இந்நிலையில் அவரின் ஜனாஸா கம்பளையில் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. பெருந்தொகையான மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இறுதி மரியாதை செலுத்தினர். இதனால் அம்பகமுவ வீதியில் பெருந்தொகையான மக்கள் குழுமியிருந்தமையைக் காண முடிந்தது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் டீ.எம்.ஜயரத்ன ஆகியோர் ஜனாஸாவில் கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சரின் மறைவை முன்னிட்டு கம்பளை நகரில் வர்த்தக நிலையங்கள் பிற்பகல் மூடப்பட்டிருந்தமையைக் காண முடிந்தது.
அத்துடன் கம்பளைக்கு வரும் அரசியல் தலைவர்களைக் கருத்தில் கொண்டு பொலிஸார் நகரில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
-எம்.எம்.எம்.ரம்ஸீன்
0 Comments