Subscribe Us

header ads

கற்பிட்டி மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் அரசியல்வாதிகள்..!! 4 தீவுகள் குத்தகைக்கு விடப்பட்டன

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி கரையோர தீவுகள் குறைந்த தொகை வாடகையில் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளன.
சுற்றுலாத் துறை அபிவிருத்தி என்ற பெயரில் நட்சத்திர ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்காகவே இங்குள்ள நான்கு தீவுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ரிசோட் லங்கா நிறுவனம் இவற்றை குத்தகைக்கு பெற்றுள்ளது.
இந்த தீவுகள் இதுவரை காலமும் மீனவர்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளதுடன், இப்பகுதியில் அவர்களின் குடியிருப்புகளும் அமைந்திருந்தன. எனினும் தற்போது அவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
அரசியல் நட்புறவின் அடிப்படையிலும், பெருந்தொகை கமிஷன் பணத்துக்காகவும் அரசியல்வாதிகள் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கற்பிட்டி பிரதேச மீனவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருப்பதாக மீனவர் அமைப்புகள் ஆதங்கம் தெரிவித்துள்ளன.

Puttalam Today

Post a Comment

0 Comments