Subscribe Us

header ads

ஊறுபொக்க பகுதியில் ஆசிரியை ஒருவர் கடத்தல்

ஊறுபொக்கை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியை ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (19) காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளையிலேயே, குறித்த ஆசிரியை கடத்தப்பட்டிருப்பதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடத்தல் தொடர்பில் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments